இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
From Wikipedia, the free encyclopedia
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.
விரைவான உண்மைகள் இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு, நாள் ...
இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பசிபிக் போர்முனை, இரண்டாம் உலகப் போர் பகுதி | |||||||
அணுகுண்டு வீச்சின் விளைவாக ஹிரோஷிமா நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (இடது); நாகசாக்கி நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (வலது) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐக்கிய இராச்சியம் | சப்பான் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வில்லியம்.எஸ்.பார்சன்ஸ் பவுல் டபிள்யு. டிப்பெட்சு, ஜூனியர் | ஷுன்ரோக்கு ஹதா | ||||||
படைப் பிரிவுகள் | |||||||
மான்ஹாட்டன் மாவட்டம் 509ஆம் கூட்டுக் குழு | இரண்டாம் பொதுப் படை | ||||||
இழப்புகள் | |||||||
இல்லை | 90,000–166,000 பேர் ஹிரோஷிமாவிலும்[1] 60,000–80,000 பேர் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டனர்[1] |
மூடு