இந்திய சீனப் போர்
1962இல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லை மோதல் / From Wikipedia, the free encyclopedia
இந்திய சீனப் போர் என்பது 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரை குறிக்கும். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், மற்ற புற காரணிகளும் இப்போர் நடப்பதற்கு முதன்மை காரணமாக விளங்கியது. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க மறுத்த தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இந்தியா முன்னோக்கிய கொள்கை என்பதை முன்னெடுத்து எல்லைப் பகுதியில் வெளிஅரண்களை அமைத்தது.
இந்திய சீனப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பனிப் போர் பகுதி | |||||||||
சீன இந்தியப் போர் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | சீனா |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பிரிஜ் மோகன் கோல் சவகர்லால் நேரு பிரான் நாத் தப்பார் | சாங் கோகுவா[2] மாவோ சேதுங் லியு போசெங் லின் பியாவோ சோ என்லாய் |
||||||||
பலம் | |||||||||
10,000-12,000 | 80,000[3][4] | ||||||||
இழப்புகள் | |||||||||
1,383 பேர் இறப்பு[5] 1,047 பேர் காயம் [5] 1,696 பேர் காணாமல் போயினர்[5] 3,968 பேர் பிடிபட்டனர்[5] | 722 பேர் இறப்பு.[5] 1,697 பேர் காயம்[5][6] |
1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். சீனா 1962, நவம்பர் 20ல் போர்நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது. மேலும் அவர்கள் சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து பழைய நிலைக்கு திரும்பினார்கள்.