இடுக்கி மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். தேவிகுளம், பெருமேடு (பீர்மேடு) வட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.
விரைவான உண்மைகள் இடுக்கி, நாடு ...
இடுக்கி | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: மூணாறில் சூரிய உதயம் , பெரியாற்றுத் தேசியப் பூங்கா , இடுக்கி அணை , ஏலக்காய் மலையில் உள்ள தேயிலை தோட்டம் , மாட்டுப்பட்டி அணை மற்றும் ஆனைமுடி சிகரம் | |
இடுக்கி | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | தெற்கு கேரளா |
தலைமை இடம் | பைனாவு |
வட்டங்கள் | 5 வட்டங்கள்
|
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீமதி. ஷீபா ஜார்ஜ் , இ.ஆ.ப |
• காவல்துறை கண்காணிப்பாளர் | ஸ்ரீ. வி.யு.குரியகோஸ் , இ.காப |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,358 km2 (1,683 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 11,08,974 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | idukki |
மூடு