2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு
From Wikipedia, the free encyclopedia
டோனால்ட் டிரம்ப் (Donald Trump), அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர், வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங்-உன் ஆகியோர் சூன் 12, 2018 அன்று இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான முதல் உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்டனர்.[2] உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ட்ரம்ப் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து இனிமேல் போர் ஒத்திகையில் ஈடுபடாது என்று உறுதியளித்தார். வட கொரிய அதிபர் கிம் முழுமையான அணு ஆயுத ஒழிப்பை நோக்கிய தனது பணியின் மீதான உறுதிப்பாட்டை மீள வலியுறுத்தினார்.
2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு DPRK–அமெரிக்க சிங்கப்பூர் உச்சி மாநாடு | |
---|---|
[[File: Logo used by Singapore Logo used by the United States கிம் ஜொங்-உன் மற்றும் டோனால்ட் டிரம்ப் உச்சி மாநாட்டின் தொடக்கத்தின் போது கைகுலுக்கிக்கொள்ளும் காட்சி|frameless|alt=|]] | |
இடம்பெற்ற நாடு | சிங்கப்பூர் |
தேதி | சூன் 12, 2018 09:00 சிங்கப்பூர் திட்ட நேரம் (01:00 ஒ. ச. நே) |
இடம் | கேபெல்லா, சிங்கப்பூர்[1] |
பங்குகொள்வோர் |
2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு | |||||||
North Korean Name | |||||||
---|---|---|---|---|---|---|---|
Chosŏn'gŭl | 조미 수뇌상봉 | ||||||
| |||||||
South Korean Name | |||||||
அங்குல் எழுத்துமுறை | 북미 정상회담 | ||||||
Hanja | 北美 頂上會談 | ||||||
|
சிங்கப்பூர், இரு தரப்பினராலும் அரசியல் அமைதிப் பிரதேசமாக கருதப்பட்டதால், செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற உச்சிமாநாட்டை நடத்துவதற்கான முழுமையான தயாரிப்புகளை மேற்கொண்டது. சிங்கப்பூர் பிரதம அமைச்சர் லீசியன் லூங்கின் கூற்றுப்படி இந்த உச்சி மாநாட்டிற்கான செலவானது சிங்கப்பூர் டாலரில் 20 மில்லியன் (அமெரிக்க டாலரில் 15 மில்லியன்) எனவும், இத்தொகையில் பாதியளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] இரண்டு தலைவர்களுமே சிங்கப்பூர் பிரதமர் லீயுடன் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சந்திப்பு நிகழ்த்தினர்.[4]