2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள்
From Wikipedia, the free encyclopedia
2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள் (2015 Sana'a mosque bombings) என்பது ஏமன் தலைநகர் சனாவிலுள்ள மசூதியின் மீது 20 மார்ச் 2015 அன்று நடத்தப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பதாகும்.[1][5] அல்-பதர் மற்றும் அல்-ஹசாஹூஷ் ஆகிய மசூதிகளின் மீது வெள்ளிக்கிழமை மதிய பிரார்த்தனை நேரத்தில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.[6] இத்தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 350 அதிகமானோர் காயமடைந்தனர்.[2][7] தாக்குதலுக்கு உள்ளான மசூதிகள் சியா இசுலாம் பிரிவினரின் வழிபாட்டிடமாகும்.[8] இத்தாக்குதலுக்கு இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.[9] இத்தாக்குதலை நடத்திய இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனில், ஏமனில் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.[10]
விரைவான உண்மைகள் இடம், நாள் ...
2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள் | |
---|---|
இடம் | சனா, ஏமன் |
நாள் | 20 மார்ச்சு 2015 (2015-03-20) (UTC+03:00) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சியா இசுலாம் பிரிவினர் |
தாக்குதல் வகை | நான்கு தற்கொலைத் தாக்குதல்கள்[1] |
இறப்பு(கள்) | 137[2] |
காயமடைந்தோர் | 351[3] |
தாக்கியோர் | இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு[4] (claimed) |
மூடு