ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவார்.[1] முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு 1803, 1809 ஆண்டுகளில் பிரித்தானிய எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் பிரித்தானியப் படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். பல்வேறு சதித்திட்டங்களால் இறுதியாக போரில் வீழ்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.[2]
விரைவான உண்மைகள் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், ஆட்சி ...
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் | |
---|---|
கண்டி அரசன் | |
கடைசிக் கண்டியரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் | |
ஆட்சி | 1798 - பெப்ரவரி 10 1815 |
முடிசூட்டு விழா | 1798 |
முன்னிருந்தவர் | ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் |
பின்வந்தவர் | ஜோர்ஜ் IIIபிரிதானிய மன்னன் |
மரபு | நாயக்க மன்னர்கள் |
தந்தை | ஸ்ரீ வேங்கடபெருமாள் |
தாய் | ஶ்ரீசுப்பம்மா |
அடக்கம் | இலங்கை |
மூடு
இவர் மதுரை நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார்.[3] இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனின் மருமகன் ஆவார்.[4]