விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
From Wikipedia, the free encyclopedia
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா (Bishweshwar Prasad Koirala) (நேபாளி: विश्वेश्वरप्रसाद कोइराला; 8 செப்டம்பர் 1914 – 21 சூலை 1982), நேபாளத்தின் 22வது பிரதம அமைச்சராக 1959 - 1960களில் செயல்பட்ட இவர் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், கிரிஜா பிரசாத் கொய்ராலாவும்[1] நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர் நேபாளத்தின் அரசியல்வாதியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர்.[1]
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா विश्वेश्वर प्रसाद कोइराला | |
---|---|
1950களில் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா | |
22வது பிரதம அமைச்சர் | |
பதவியில் 27 மே 1959 – 26 டிசம்பர் 1960 | |
ஆட்சியாளர் | மகேந்திரா |
முன்னையவர் | சுபர்ண சம்செர் ராணா |
பின்னவர் | துளசி கிரி |
நேபாளி காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தலைவர் | |
பதவியில் 26 மே 1952 – 24 சனவரி 1956 | |
முன்னையவர் | மாத்ரிக பிரசாத் கொய்ராலா |
பின்னவர் | சுபர்ணா சம்செர் ராணா |
பதவியில் 23 மே 1957 – 21 சூலை 1982 | |
முன்னையவர் | சுபர்ண சம்செர் ராணா |
பின்னவர் | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் |
நேபாள உள்துறை அமைச்சர் | |
பதவியில் 21 பிப்ரவரி 1951 – 12 நவம்பர் 1951 | |
பிரதமர் | மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1914-09-08)8 செப்டம்பர் 1914 வாரணாசி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 சூலை 1982(1982-07-21) (அகவை 67) காட்மாண்டு, நேபாளம் |
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் |
துணைவர் | சுசிலா கொய்ராலா |
பெற்றோர் | கிருஷ்ண பிரசாத் கொய்ராலா (தந்தை) |
உறவினர்கள் | மாத்ரிக பிரசாத் கொய்ராலா, கிரிஜா பிரசாத் கொய்ராலா |
கையெழுத்து | |
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, முதன் முறையாக நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்ப்பட்ட முதல் நேபாளப் பிரதமர் ஆவார். பதினெட்டு மாத கால பிரதமர் பதவியில் இருந்த போது, நேபாள மன்னர் மகேந்திராவின் ஆணையின் படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான வாழ்க்கை சிறையில் கழிப்பதும், நாடு கடத்தப்படுவதுமாக இருந்தது. இதனால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.[2]