விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 18
வார்ப்புரு விக்கிப்பீடியா / From Wikipedia, the free encyclopedia
மே 18: முள்ளிவாய்க்கால் நினைவு நாள், பன்னாட்டு அருங்காட்சியக நாள்
- 1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
- 1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது "கோதிங்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
- 1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
- 1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.
- 2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
- 2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் எனத் தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள் (படம்)
எம். வி. வெங்கட்ராம் (பி. 1920) · ஆர். பிச்சுமணி ஐயர் (பி. 1920) · பி. எஸ். இராமையா (இ. 1983)
அண்மைய நாட்கள்: மே 17 – மே 19 – மே 20