வங்காள நவாபுகள்
From Wikipedia, the free encyclopedia
வங்காள நவாபுகள் (Nawabs of Bengal or Nawab Nizam of Bengal and Orissa) முகலாயப் பேரரசின் வங்காளம், ஒடிசா, பிகார் மற்றும் முர்சிதாபாத் பிரதேசங்களின் நவாப் நிசாம் எனும் ஆளுநர்கள் ஆவர்.
வங்காள நவாபுகள் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1717–1765 | |||||||||||||||||
குறிக்கோள்: Nil Desperandum "There is no cause for despair, never despair" | |||||||||||||||||
தலைநகரம் | முர்சிதாபாத்c | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | வங்காளம் பாரசீகம் உருது போஜ்புரி மைதிலி அசாமியம் | ||||||||||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||||||||||
அரசாங்கம் | மாகாணம் | ||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | முகலாயப் பேரரசு இந்தியாவில் கம்பெனி ஆட்சி | ||||||||||||||||
• முகலாயப் பேரரசு | 1526 | ||||||||||||||||
• தொடக்கம் | 1717 | ||||||||||||||||
23 சூன் 1757 | |||||||||||||||||
22 அக்டோபர் 1764 | |||||||||||||||||
• மன்சூர் அலி கானிடமிருந்து வங்காள நவாபு பதவி பறித்தல் | 1880 | ||||||||||||||||
• முடிவு | 1765 | ||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||
• 1901 | 75 மில்லியன்[1] | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா வங்காளதேசம் | ||||||||||||||||
|
வங்காள நவாபுகள் முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக பெயரளவில் இருப்பினும், 1717 - 1765க்கு இடைப்பட்ட காலங்களில், வங்காள மாகாணத்தின் தன்னாட்சியாளர்களாகவே விளங்கினர்.
வங்காளத்தின் இறுதி நவாப் சிராஜுதின் உத் தௌலாவை, 1757ல் நடைபெற்ற பிளாசிப் போரின் போது, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி படைத்தலைவர்களிடம், மிர் ஜாஃபர் என்ற படைத்தலைவர் காட்டிக் கொடுத்ததால், அவருக்கு வஙகாள நவாப் பதவியை ஆங்கிலேயர்கள் பரிசாக அளித்தனர்.[2]
1765 முதல் 1772 முடிய பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு அடங்கிய வங்காள பொம்மை நவாபுகள் ஆண்டனர். 1772ம் ஆண்டிலிருந்து வஙகாளத்தை பிரித்தானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் சென்றது.
1793ம் ஆண்டு முதல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினர், வங்காள நவாபுகளின் ஆளுநர் பதவிகளை பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்கினர்.[3][4]
நவம்பர், 1880ல் வங்காளத்தின் இறுதி நவாப் மன்சூர் அலி கானுக்குப் பதிலாக அவரது மகன் அசன் அலி மிர்சாவை வங்காளம் மற்றும் முர்சிதாபாத் நவாபாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் நியமித்தனர்.[5].[5][6] 1880ல் வங்காள நவாபுகளின் பட்டங்களை ஆங்கிலேயர்கள் பறித்தனர்.
1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், வங்காள மாகாணத்தில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்ப்பட்டது.[7] முர்சிதாபாத், 17 ஆகஸ்டு 1947ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[7] முர்சிதாபாத் நவாப்புகளின் இறுதி வாரிசு 1969ல் வாரிஸ் அலி மிர்சாவுடன் முடிவுற்றதாக இந்திய அரசு அறிவித்தது.[8]