வங்காள சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
வங்காள சுல்தானகம் (Bengal Sultanate); (பாரசீக மொழி: بنگاله Bangālah, வங்காள மொழி: বাঙ্গালা/বঙ্গালা) and Shahi Bangalah (பாரசீக மொழி: شاهی بنگاله சாகி பங்களா, வங்காள மொழி: শাহী বাঙ্গলা))[1]தில்லி சுல்தான்கள் 14ம் நூற்றாண்டில் பல்வேறு இராச்சியங்களாக சிதறியிருந்த வங்காள பிரதேசங்களை தில்லி சுல்தான்கள் கைப்பற்றி ஒன்றிணைத்தனர். தில்லி சுல்தானகத்தின் ஆளுநர்களாக வங்காள சுல்தான்கள் 1352 முதல் 1576 முடிய ஆண்டனர். பின்னர் முகலாயப் பேரரசு காலத்தில் வங்காள நவாபுகள் வங்காளத்தை ஆண்டனர். வங்காள சுல்தான்கள், பாரசீக நாட்டின் சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரசீக மொழி மற்றும் பண்பாட்டை பின்பற்றுபவர்கள்.
வங்காளம் Bengala শাহী বাংলা شاهی بنگاله | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1352–1576 | |||||||||||||
கொடி | |||||||||||||
நிலை | வங்காள சுல்தானகம் | ||||||||||||
தலைநகரம் | கௌட நகரம், சோனார் கோன் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம் வங்காளம் (அலுவல் மொழி) | ||||||||||||
சமயம் | இசுலாம் (அலுவல்) இந்து சமயம் பௌத்தம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• வங்காளத்தை ஒன்றிணைத்தல் | 1352 | ||||||||||||
• முகலாயப் படையெடுப்பு | 1576 | ||||||||||||
நாணயம் | டங்கா | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் இந்தியா மியான்மர் |
தெற்காசியாவின் கிழக்கு பகுதியையும், தென்கிழக்காசியாவையும் இணைக்கும் வங்காள சுல்தானகத்தை ஐந்து இசுலாமிய வம்ச சுல்தான்கள் ஆண்டனர்.
சிட்டகாங் பகுதியில் போர்த்துகேயர்களுக்கு வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவ வங்காள சுல்தான்கள் அனுமதி அளித்தனர்.[2]
1537ல் ஆப்கானிய படைத்தலைவர் சேர் சா சூரி வங்காள நவாபுகளை வென்று வங்காளத்தை கைப்பற்றினார். சேர் சா சூரியின் இறப்பிற்குப் பின்னர் 1576-இல் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்தது.