முதலாம் யூத-உரோமைப் போர்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் யூத-உரோமைப் போர் (first Jewish–Roman War, கி.பி. 66 – 73) அல்லது பெரும் கிளர்ச்சி (The Great Revolt, எபிரேயம்: המרד הגדול, இலத்தீன்: Primum Iudæorum Romani Bellum) என அழைக்கப்படும் இது யூதர்களின் உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரம்பரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும், மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றன.
முதலாம் யூத-உரோமைப் போர் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
யூத-உரோமைப் போர்கள் பகுதி | ||||||||
முதலாம் நூற்றாண்டு யூதேயா மற்றும் கலிலேயா |
||||||||
|
||||||||
பிரிவினர் | ||||||||
உரோமைப் பேரரசு | யூதேயா போராட்டக்காரர்கள்:
| தீவிர பிரிவினர்:
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||
வஸ்பாசியன் தைத்தஸ் லூசிலியஸ் பஸ்செஸ் | எலியேசர் பென் கனானியா எலியேசர் பென் கியோரா யோசெபஸ் | கிஸ்சலாவின் ஜோன் எலியேசர் பென் சீமோன் எலியேசர் பென் யாயிர் |
||||||
பலம் | ||||||||
1 காலாட்படை (30,000) பெத் கோரொனில்; 5 காலாட்படைகள் (60,000–80,000) எருசலேம் முற்றுகையில் | 25,000+ யூத போராட்டக்காரர்கள் 20,000 எடோமென்கள் சில நூறு அடியாபென் வீரர்கள் | |||||||
இழப்புகள் | ||||||||
20,000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர் | பத்தாயிரங்கள் | ஆயிரங்கள் | ||||||
மொத்த மரணம்: 250,000[1] – 1.1[2] மில்லியன் யூத போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;97,000[2] அடிமைகளாக்கப்பட்டனர் |
இந்தப் பெரும் கிளர்ச்சி கி.பி 66 இல், உரோம, யூத இனங்களுக்கிடையே உருவாகியது. வரி எதிர்ப்புப் போராட்டம், உரோமானியா குடிமக்கள் மீதான தாக்குதல் ஆகியன நெருக்கடியை அதிகமாக்கியது.[3] இதற்குப் பதிலடியாக, உரோமானியர்கள் யூதக் கோவிலைக் கொள்ளை அடித்தும், கிட்டத்தட்ட எருசேலத்தில் 6,000 யூதர்களைக் கொன்றதாலும் ஒரு முழு அளவிலான கிளர்ச்சியை உருவாக்கினர். ஆனால், மிக விரைவாக யூத கலகக்காரர்களால், யூத நிலத்தில் இருந்த உரோமானியக் காவல் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. இதில் உரோம அரசன் இரண்டாம் அக்ரிப்பாவும் உரோம அதிகாரிகளும் எருசேலத்தை விட்டு வெளியேறினர். இந்தக் கிளர்ச்சி, கட்டுப்பாட்டை மீறிச் செல்வது தெளிவாகிய பொழுது, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கு திரும்புவதற்காக சிரியாவின் ஆளுநராக இருந்த செஸ்டியஸ் காலுஸ், சிரியப்படையுடனும் அதன் துணைப்படைகளுடனும் களத்திற்கு வந்தான். ஆரம்பத்தில் சிரியப் படைகள் முன்னேறி, ஜாப்பா நகரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததும், பதுங்கிருந்த யூத கலகக்காரர்கள், சிரியப் படைகளைப் பெத் ஹாரோன் களத்தில் வீழ்த்தினர். இதில் 6,000 உரோமானியர்கள் கொன்றழிக்கப்பட்டனர். மேலும், உரோமானியப் படையின் அக்யுலா என்ற சின்னமும் இடிக்கப்பட்டது. இது உரோமனியத் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிறகு, எருசலேமில் சிகாரி என்றழைக்கப்பட்ட யூத குழுக்கள் மெனாகேம் பெண் டெபஹோடா தலைமையில் நகரைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றது. தலைவன் கொல்லப்பட்டான். சிகாரி குழுக்கள் நகரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். எருசலேமின் அடிப்படைவாத உளவுத் தலைவர் சீமோன் பார் கியோராவும் புதிய யூத அரசால் நகரை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் பென் ஆனானஸ் நகரை மீண்டும் வலிமைப்படுத்தத் தொடங்கினான். யோசப் பென் மத்தியாகு கலிலேயா நகரத் தளபதியாகவும், எலேசர் பென் ஹனானியா எடோம் பகுதி தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
கர்வமற்ற, மிக்க அனுபவமுள்ள உரோமப் பேரரசன் வெஸ்பாசியனுக்கு, யூத பகுதியிலுள்ள கலகக்காரர்களை அழிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவனுடைய மகன் தித்தூஸ் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டான். கி.பி. 67 இல் நான்கு படைப்பிரிவுகளோடு, அரசன் இரண்டாம் அகரிப்பாவுடைய படைகளும் உதவிக்கு வர, கி.பி. 67 இல் கலிலேயா பகுதிக்குள் வெஸ்பாசியன் ஊடுருவினான். முதன்மை கலகக்காரர்களின் பாதுகாப்பில் இருந்த வலிமையான எருசலேம் நகரை நேரடியாகத் தாகர்ப்பதைத் தவிர்த்த உரோமப் படைகள், கலகக்காரர்களின் கோட்டையை முற்றிலும் ஒழிக்கவும், தண்டிக்கவும், முனைப்பியக்கதையை சளைக்காமல் ஏவ ஆரம்பித்தனர். சில மாதங்களுக்குள்ளாகவே வெஸ்பாசியனும், தித்துவும் கலிலேயா பகுதியின் யூதர்களின் முக்கிய கோட்டையை கைப்பற்றினர். மேலும், முற்றுகையின் 47 ஆம் நாளில் யோசேப் பென் மத்தேயகுவன் கட்டுப்பாட்டில் இருந்த யோம்பாத் பகுதியும் கைப்பற்றப்பட்டது. கலிலேயாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிலாட் (ஒரு யூத குழு) மற்றும் அகதிகள் எருசலேமிற்கு வந்து அங்கு ஒரு அரசியல் இடர்பாட்டை ஏற்படுத்தினர். சிலாட் படையில் ஜான் கிச்காலா மற்றும் எலேசர் பென் சீமோன் கட்டுப்பாட்டில் இருந்த குழுவிற்கும், எருசலேமின் சதுசேய குழுவிற்கும் இடையே ஒரு எதிர்ப்பு மோதல் ஏற்பட்டு பின் அது பெரும் வன்முறையாக வெடித்தது. சிலாட் யூத குழுக்களுக்கு ஆதரவாக சண்டையிட 'எடொமிட்' படையினர் நகருக்குள் நுழைந்தனர். அனானுஸ் பென் அனானுஸ் கொல்லப்பட்டான். அவனுடைய படையினருக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. சிலாட் குழுக்களுக்கு எதிராக சண்டையிட, சதுசேயர் தலைவர்கள் சீமோன் பார் கியோராவை எருசலேமிற்கு அழைத்தனர். சீமோன் படை 15,000 படைவீரர்களுக்கு தளபதியாக இருந்தான். சீமோன் படை வந்ததும் நகரின் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பார்-கியோரா குழுவினருக்கும், ஜான் மற்றும் எலேசர் படையினருக்குமிடையே கடும் சண்டை கி.பி 69 இல் ஏற்பட்டது.
உரோம் நகரில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், சண்டைகள் காரணமாக, இராணுவ செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதால் வெஸ்பாசியன் மீண்டும் உரோம் நகருக்கு அழைக்கப்பட்டு கி.பி. 69 இல் அரசனாக நியமிக்கப்பட்டான். வெஸ்பாசியன் புறப்பட்டதை தொடர்ந்து, தித்து எருசலேமில் கலகக்காரர்களின் மையப்பகுதியை கைப்பற்ற முன்னேறிச் சென்றான். மூன்று வார காலத்திற்குள்ளாக எருசலேமின் முதல் இரண்டு சுவர்கள் தகர்க்கப்பட்டன. ஆனால், கடினமான மூன்றாவது சுவரை உரோமப் படைகள் தகர்பதை, கலகக்காரர்கள் முன்னின்று எதிர்த்து தடுத்தி நிறுத்தினர். ஏழு மாத கால மிக கொடுமையான முற்றுகை சண்டையில், நகரின் உணவு விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. கி.பி. 70 ஆம் ஆண்டில் கோடை காலத்தில் பலவீனமான யூத படைகளின் பாதுகாவலை உரோமப் படைகள் தகர்த்து வெற்றிக் கண்டது. எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு, தித்து உரோமை விட்டு வெளியேறி உரோம இராணுவத்தின் பத்தாவது படையினரோடு மீதமிருந்த யூத கோட்டைகளை தோற்கடிக்க கிளம்பினான். கி.பி. 73-74 இல் மசாடாவை முற்றுகையிட உரோம முனைப்பியக்கம் இறுதி செய்யப்பட்டது.