புசாகர் மாநிலம்
பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானம் / From Wikipedia, the free encyclopedia
புசாகர் (Bushahr), 'பசாகர்' என்றும் 'புசாகிர்' அல்லது 'புசைர்' என்றும் உச்சரிக்கப்படும் இது பிரித்தானிய ஆட்சியின் போது இந்தியாவில் இராஜபுத்திர சுதேச சமஸ்தானமாக இருந்தது. இது குடியேற்ற பஞ்சாப் பகுதியின் வடக்குப் பகுதியில் திபெத்தின் எல்லையில் மலைப்பாங்கான மேற்கு இமயமலைப் பகுதியில் அமைந்திருந்தது.
விரைவான உண்மைகள்
புசாகர் அரசு | |||||
சுதேச அரசு பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
பஞ்சாபில் புசாகரின் அமைவிடம், 1911 | |||||
தலைநகரம் | இராம்பூர், புசாகர் (கடைசி) | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1412 | |||
• | இந்திய விடுதலை இயக்கம் | 1948 | |||
Population | |||||
• | 115,000 | ||||
மூடு
இந்த முன்னாள் மாநிலத்தின் பிரதேசம் இப்போது தற்போதைய இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது. முந்தைய புசாகர் மாநிலத்தில் சத்லஜ் ஆறு நதி கடந்து சென்றது. இது மேற்கில் குல்லு, லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாநிலங்களாலும், கிழக்கில் கார்வாலாலும் எல்லையாக சூழப்பட்டிருந்தது. இது 8,907 பரப்பளவைக் கொண்டிருந்தது.