நீலகிரி மந்தி
From Wikipedia, the free encyclopedia
நீலகிரி மந்தி (Nilgiri langur) என்பது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் குரங்கு இனம் ஆகும். இவை கர்நாடகத்தின் குடகு, தமிழ்நாட்டு பழனி மலைகள், கேரலத்தின் ஏலக்காய் மலை ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வாழும்.[2] இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளைநிலங்களை வேட்டையாடும். இவற்றின் எண்ணிக்கை, மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும்,"பாலுணர்வைத் தூண்டும் மருந்து" என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப்படுவதால் குறைவடைந்ததன் பொருட்டு இது அழியவாய்ப்புள்ள இனம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நீலகிரி மந்தி Nilgiri langur, காப்பு நிலை ...
நீலகிரி மந்தி Nilgiri langur[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே |
பேரினம்: | டிராகிபித்திகசு |
இனக்கூட்டம்: | டிராகிபித்திகசு வெட்டுலசு |
இனம்: | டி. ஜானி |
இருசொற் பெயரீடு | |
டிராகிபித்திகசு ஜானி (பிசர், 1829) | |
நீலகிரி மந்தி பரம்பல் |
மூடு