தாசுமேனியப் புலி
ஆத்திரலேசியாவின் அற்று விட்ட, ஊண் உண்ணும் பைம்மாவினம் / From Wikipedia, the free encyclopedia
தாசுமேனியப் புலி அல்லது தைலேசீன்[11] (ஆங்கிலப் பெயர்: thylacine, உயிரியல் பெயர்: Thylacinus cynocephalus) என்பது தற்காலத்தில் அற்றுவிட்ட, ஊன் உண்ணும் பைம்மாவினங்களிலேயே மிகப் பெரியதாகும். இது தாசுமேனியப் புலி (இதன் அடிமுதுகின் கோடுகளின் காரணமாக) அல்லது தாசுமேனிய ஓநாய்[12] என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியக் கண்டம், தசுமேனியா, நியூ கினி ஆகிய இடங்களில் காணப்பட்டது. இது புலிகளைப் போன்ற வரிகளும், கங்காருவைப் போன்ற தடித்த பின் வாலையும் உடையது.
Animalia
விரைவான உண்மைகள் தைலேசீன் புதைப்படிவ காலம்:ஆரம்ப பிலியோசீன்–தற்காலம், காப்பு நிலை ...
தைலேசீன்[1] புதைப்படிவ காலம்:ஆரம்ப பிலியோசீன்–தற்காலம் | |
---|---|
தைலேசீன்கள், வாஷிங்டன் டி.சி., அநேகமாக 1906 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
Infraclass: | மார்சூப்பிகள் |
வரிசை: | Dasyuromorphia |
குடும்பம்: | †Thylacinidae |
பேரினம்: | †Thylacinus |
இனம்: | †T. cynocephalus |
இருசொற் பெயரீடு | |
Thylacinus cynocephalus (ஹாரிஸ், 1808)[3] | |
தாசுமேனியாவில் தைலேசீனின் வாழ்விடங்கள்[4] | |
வேறு பெயர்கள் | |
மூடு
மேய்ச்சல் ஆடுகளைத் தாக்கி உண்பதால், விவசாயிகளால் பெருமளவு வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்ட உயிரினம். இந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் ஓநாய், 1936இல் மிருகக் காட்சி சாலையில் இறந்துவிட்டதோடு இதன் எண்ணிக்கை முடிவிற்கு வந்தது.