சோலுகும்பு மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சோலுகும்பு மாவட்டம் (Solukhumbu District) (நேபாளி: सोलुखुम्बु जिल्लाகேட்கⓘ, செர்ப்பா: வார்ப்புரு:ཤར་ཁུམ་བུ་རྫོང་ཁ།, தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டின், கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 1-இல், சாகர்மாதா மண்டலத்தில் அமைந்துள்ளது. சோலுகும்பி மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். சோலு மற்றும் கும்பு பகுதிகளை உள்ளடக்கியதே சோலுகும்பு மாவட்டாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சல்லேரி நகரம் ஆகும்.
சாகர்மாதா மண்டலத்தில் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தின் பரப்பளவு 3,312 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,05,886 ஆகும்.[1]
உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம், இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.
கிராதர்கள் என அழைக்கப்படும் உள்ளூர் இராய் மற்றும் செட்டிரி மலைவாழ் இன மக்கள் இமயமலையின் நடுவிலும், செர்ப்பா இன மக்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
1953-இல் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் பதித்த டென்சிங் நோர்கே, சோலுகும்பு மாவட்டத்தில் வளர்ந்தவர் ஆவார்.