சிந்த் கௌர்
சீக்கிய பேரரசின் மகாராணி / From Wikipedia, the free encyclopedia
மகாராணி சிந்த் கௌர் (Maharani Jind Kaur 1817கள்- 1 ஆகத்து 1863) 1843 முதல் 1846 வரை சீக்கிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். சீக்கிய பேரரசின் முதல் மனனரான ரஞ்சித் சிங்கின் இளைய மனைவியும், கடைசி அரசனான துலீப் சிங்கின் தாயும் ஆவார். இவர் அழகு, ஆற்றல் மற்றும் நோக்கத்தின் வலிமைக்கு புகழ்பெற்றவர். மேலும், "இராணி சிந்தன்" என்று பிரபலமாக அறியப்பட்டார். ஆனால் இவரது புகழ் முக்கியமாக பிரித்தானியப் பேரரசின் மீது ஏற்பட்ட பயத்திலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இவரை "பஞ்சாபின் மெசலினா" என்று விவரித்தனர்.[1]
மகாராணி சிந்த் கௌர் | |
---|---|
சீக்கியப் பேரரசின் மகாராணி மகாராணி சாகிபா இராணி சிந்தன் பஞ்சாபின் கடைசி மகாராணி | |
45களில் மகாராணி சிந்த் கௌர்.
(ஓவியம் சியோர்சு ரிச்மாண்டு) | |
சீக்கியப் பேரரசின் மகாராணி | |
பதவிக்காலம் | 1835கள் – 1839 |
சீக்கியப் பேரரசீக்கியப் பேரரசின் அரசப் பிரதிநிதி | |
அரசப் பிரதிநிதி | 1843கள் – 1846 |
ஏகாதிபத்தியம் | துலீப் சிங் |
பிறப்பு | 1817 (1817) சச்சார், குஜ்ரன்வாலா, சீக்கியப் பேரரசு (தற்போதைய பஞ்சாப், பாக்கித்தான்) |
இறப்பு | 1 ஆகத்து 1863(1863-08-01) (அகவை 45) கென்சிங்டன், மிடில்செக்ஸ், ஐக்கிய இராச்சியம் |
துணைவர் | ரஞ்சித் சிங் |
குழந்தைகளின் பெயர்கள் | துலீப் சிங் |
மரபு | அவுலாக் |
தந்தை | மன்ன சிங் அவுலாக் |
மதம் | சீக்கியம் |
ரஞ்சித் சிங்கின் முதல் மூன்று வாரிசுகளின் படுகொலைகளுக்குப் பிறகு, துலீப் சிங் செப்டம்பர் 1843இல் தனது 5 வயதில் ஆட்சிக்கு வந்தார். தனது மகன் சார்பாக சிந்த் கௌர் அரசப் பிரதிநிதி ஆனார். முதலாம் ஆங்கிலேய-சீக்கியர்கள் போரில் தோல்வியடைந்த பிறகு, இவர் திசம்பர் 1846இல் ஒரு பிரித்தானிய ஆட்சிப் பிரதிநிதியின் கட்டுப்பாட்டின் கீழ், ஆட்சி செய்பவராக மாற்றப்பட்டார். இருப்பினும், இவருடைய சக்தியும் செல்வாக்கும் தொடர்ந்தது. இதை எதிர்த்து, பிரிட்டிசார் இவரை சிறையில் அடைத்து நாடு கடத்தினர். இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தன் மகனைப் பார்க்க இவர் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கு முன் பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. [2]
சனவரி 1861இல் துலீப் சிங் தனது தாயை கொல்கத்தாவில் சந்திக்க அனுமதிக்கப்பட்டு அவருடன் மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் 46 வயதில் ஆகத்து 1, 1863 அன்று இலண்டன் கென்சிங்டனில் இறக்கும் வரை தனது மகனுடன் இருந்தார். இவரது உடல் தற்காலிகமாக கென்சல் பசுமை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள நாசிக்கில் தகனம் செய்யப்பட்டார். இவரது எச்சங்கள் இறுதியாக இவரது கணவர் ரஞ்சித் சிங்கின் லாகூரில் உள்ள சமாதிக்கு (நினைவிடம்) இவரது பேத்தி இளவரசி பம்பா சோபியா ஜிந்தன் துலீப் சிங்கால் கொண்டு செல்லப்பட்டது.[3]