கோயம்புத்தூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோயம்புத்தூர் ஆகும். இந்த மாவட்டம் 4723 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
கோயம்புத்தூர் | |
மாவட்டம் | |
கோவை மாவட்டம் | |
பேரூர் பட்டீசுவரர் கோயில் | |
கோயம்புத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | கோயம்புத்தூர் |
பகுதி | கொங்கு நாடு |
ஆட்சியர் |
மருத்துவர் ஜி.எஸ். சமீரான், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 7 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 11 |
பேரூராட்சிகள் | 33 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
ஊராட்சிகள் | 227 |
வருவாய் கிராமங்கள் | 295 |
சட்டமன்றத் தொகுதிகள் | 10 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 4723 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
34,58,045 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
641 xxx, 642 xxx |
தொலைபேசிக் குறியீடு |
0422 |
வாகனப் பதிவு |
TN-37, TN-37Z, TN-38, TN-40, TN-41, TN-41Z, TN-66, TN-99 |
பாலின விகிதம் |
ஆண்-50.00%/பெண்-50.00% ♂/♀ |
கல்வியறிவு |
83.98% |
சராசரி கோடை வெப்பநிலை |
35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை |
18 °C (64 °F) |
இணையதளம் | coimbatore |
பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.
பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது.[1] கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.