கூடு
விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது குஞ்சுகளை வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ள / From Wikipedia, the free encyclopedia
கூடு என்பது விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது இளம் குஞ்சுகளை பேணி வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ளும் இடமாகும். இவை பொதுவாக தும்பு, புல், இலை போன்ற சேதனப் பொருட்களால் அமைக்கும் அல்லது கடதாசி, பிளாத்திக்கு மற்றும் துணி வகைகளைக் கொண்டு அமைக்கும். சிலவேளை மரப்பொந்து, நிலங்கீழ் வளை மற்றும் மலைப் பொந்துகளும் கூடுகளாகப் பயன்படுத்தப் படுவதுண்டு.
பொதுவாக ஒவ்வொரு வகை விலங்கின் கூடும் ஒவ்வொருவிதமாய் அமையும். கூடுகள் பொதுவாக பறவைகளால் கட்டப்படுகின்றன. ஆனாலும் சில பாலூட்டிகளும் (எ.கா. அணில், மீன், சில பூச்சிகள், (எ.கா. குளவி (பூச்சி)கள், கறையான்கள் மற்றும் தேனீக்கள் மற்றும் ஊர்வன,(எ.கா. பாம்பு மற்றும் ஊர்வன) கூடுகளை அமைக்கின்றன.