![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Seshadri_Iyer.jpg/640px-Seshadri_Iyer.jpg&w=640&q=50)
கு. சேசாத்ரி ஐயர்
From Wikipedia, the free encyclopedia
சர் குமாரபுரம் சேசாத்ரி ஐயர் (Sir Kumarapuram Seshadri Iyer) (1845 சூன் 1 - 1901 செப்டம்பர் 13), ஓர் வழக்கறிஞரான இவர் 1883 முதல் 1901 வரை மைசூர் திவானாக பணியாற்றினார். 1881 ஆம் ஆண்டில் உடையார் குடும்பத்தை மீண்டும் அரியணையில் அமர்த்தியதிலிருந்து மைசூர் மாநிலத்தின் இரண்டாவது திவான் ஆவார். மேலும் சுதேச அரசின் மிக நீண்ட கால திவானாகவும் இருந்தார். இவர் நவீன பெங்களூரைக் கட்டமைத்தவராகக் கருதப்படுகிறார்.
குமாரபுரம் சேசாத்ரி ஐயர் | |
---|---|
![]() | |
மைசூர் இராச்சியத்தின் 15ஆவது திவான் | |
பதவியில் 1883 பிப்ரவரி 12 – 1901 மார்ச் 18 | |
ஆட்சியாளர்கள் | பத்தாம் சாமராச உடையார், நான்காம் கிருட்டிணராச உடையார் |
முன்னையவர் | செ. வீ. இரங்காச்சார்லு |
பின்னவர் | தி. ஆர். ஏ. தம்புச் செட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1845-06-01)1 சூன் 1845 பாலக்காடு, கேரளா |
இறப்பு | 13 செப்டம்பர் 1901(1901-09-13) (அகவை 56) மைசூர் |
துணைவர் | தர்மசம்வர்தினி (1865-1901) |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
தொழில் | அரசு ஊழியர், நிர்வாகி |
சென்னை மாகாணத்திலிருந்த நவீன கேரளாவில் உள்ள மலபார் மாவட்டத்தின் பாலகாட்டில் இவர் பிறந்தார். கோழிகோட்டில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 1868 இல் சென்னையின் மாநிலக் கல்லூரியில் கலைகளில் பட்டம் பெற்றார். மேலும், இவர் ஒரு தகுதி வாய்ந்த வழக்கறிஞராகவும் இருந்தார்.
இவர் 1868 இல் மைசூர் இராச்சியத்தில் பனியில் சேர்ந்தார். மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் திவானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார். இவர் மைசூர் இராச்சியத்தில் மிக நீண்ட காலம் திவானாக 1883 முதல் 1901 வரை பணியாற்றினார்.
மைசூர் அரசுப் பணித் தேர்வுகள் முதன்முறையாக 1891 இல் நடைபெற்றன. மேலும், 1894. 1898 ஆம் ஆண்டுகளில் புவியியல் துறையும் வேளாண்மைத் துறையும் ஆகியவை நிறுவப்பட்டன. வேதவதி ஆற்றின் குறுக்கே வாணிவிலாச சாகர் அணை, 1899 ஆம் ஆண்டில் சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்தைத் தொடங்கியது (இந்தியாவில் இது முதல் பெரிய முயற்சி), மின்சாரம், குடிநீர் (குழாய்கள் வழியாக கொண்டு சேர்த்தது) ஆகியவை குறிப்பிடத்தக்க சாதனைகள். மைசூர் தொல்பொருள் ஆய்வகம் (1890), கீழைநாட்டுவியல் கையெழுத்துப் பிரதி நூலகம் நிறுவப்பட்டது.
இவர் கோலார் தங்க வயல்களையும் விக்டோரியா மருத்துவமனையையும் நிறுவி சிவசமுத்ரா நீர்மின் மின்சார திட்டத்தை தொடங்கினார். இவர் 1898 ஆம் ஆண்டில் பெங்களூரை பாதித்த பேரழிவு தரும் பிளேக்கைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் தெருக்களை விரிவுபடுத்தியும், பிளேக்குக்குப் பின்னர் நகரத்தை புனரமைத்தும் இருந்தார்.