கார்வால் நாடு
From Wikipedia, the free encyclopedia
கார்வால் நாடு (Garhwal Kingdom or Tehri Garhwal) (இந்தி: गढ़वाल राज्य) இந்தியாவின் வடக்கில் இமயமலை பகுதியில், சிவாலிக் மலைத் தொடரில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை இராஜபுத்திர குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு பொ.ஊ. 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் கார்வால் அரசு தெக்ரி கார்வால்கார்வால் நாடு, தலைநகரம் ...
கார்வால் அரசு தெக்ரி கார்வால் கார்வால் நாடு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ. 888–1949 | |||||||||
கொடி | |||||||||
தலைநகரம் | தேவல்கார் பொ.ஊ. 1500-1519 ஸ்ரீநகர், உத்தரகண்ட் 1519-1804 தெஹ்ரி 1815-1862 பிரதாப்நகர் 1862-1890 கீர்த்திநகர் 1890-1925 நரேந்திரநகர் 1925-1949 | ||||||||
பேசப்படும் மொழிகள் | கார்வாலி சமஸ்கிருதம் இந்தி | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி சுதேச சமஸ்தானம் (1815–1949) | ||||||||
கார்வால் மஹாராஜா | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | பொ.ஊ. 888 | ||||||||
• முடிவு | 1949 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | உத்தரகண்ட், இந்தியா |
மூடு
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானமாக 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசுடன் இணைந்தது.
கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் உத்தரகாசி மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது.