இந்திய-சீன எல்லைப் பிணக்குகள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் (Indo china border disputes) 1947ஆண்டு முதல் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைப் பகுதிகளின் உரிமைகள் குறித்து பிணக்குகள் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவின் லடாக்கின் வடமேற்கே இமயமலையில் அமைந்த அக்சாய் சின் பிரதேச உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் 1962 முதல் பிணக்குகள் ஏற்பட்டது. பிரித்தானிய இந்தியா- திபெத் இராச்சியத்தினர் 1914-இல் செய்து கொண்ட சிம்லா உடன்படிக்கைப் படி, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் - திபெத் எல்லைக்கோட்டை வரையறுக்கும் மெக்மோகன் கோட்டை சீனா இதுவரை ஏற்கவில்லை. மேலும் இந்த உடன்படிக்கையின் போது, சீனாவின் கருத்தை கோரப்படவில்லை எனக்காரணம் காட்டி, சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை தனதென உரிமை கோரி, இந்தியாவுடன் பிணக்கு கொண்டுள்ளது.[1]
1962-இல் நடைபெற்ற இந்திய சீனப் போர் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசப் பகுதிகளில் கடுமையாக நடைபெற்றது. எல்லைப் பிணக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 1996-இல் இந்தியா-சீனா இடையே உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டை ஏற்றது. 2006-இல் இந்தியாவிற்கான சீன தூதுவர், அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதி என உரிமை கொண்டாடினார்.[2][3]
அந்த நேரத்தில் இரு நாட்டுப் படைகளும், சிக்கிமின் வடக்கெல்லையில் சில கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது என உரிமை கோரினர்.[4] 2009-இல் இந்திய-சீன எல்லை நெடுகிலும் இந்தியா கூடுதல் படைப்பிரிவுகளை நிறுத்தப் போவதாக அறிவித்தது.[5]இந்திய-சீனா எல்லைப் பிணக்குகளை தீர்க்க, 2014-இல் இந்தியா அறிவித்த ஒரு தேசம் என்ற கொள்கையை சீனா ஏற்றுக் கொள்ளவேண்டும் என அறிவித்தது.[6][7]