ஆந்திரப் பிரதேசம் (1956–2014)
ஐதராபாத்தை தலைநகராகக் கொண்ட இந்தியாவின் முன்னாள் மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேசம், ஐக்கிய ஆந்திரப் பிரதேசம், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் அல்லது உம்மடி ஆந்திரப் பிரதேசம் என்பது முன்பு இருந்த மாநிலத்தைக் குறிப்பிடும் பெயர்களாகும். இந்த மாநிலம் இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் மூலம் ஐதராபாத்தைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மூலம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. தெலங்காணா, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா ஆகிய மூன்று தனித்துவமான பண்பாட்டுப் பகுதிகளால் இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்காணா முன்பு ஐதராபாத் நிசாம் ஆட்சி செய்த ஐதராபாத் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதே சமயம் இராயலசீமை மற்றும் கடலோர ஆந்திரம் ஆகியவை ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தன. இது முன்னர் பிரித்தானிய இந்தியாவால் ஆளப்பட்ட மதறாஸ் இராசதானியின் ஒரு பகுதியாக இருந்தது.