அப்பல்லோ 1
அமெரிக்காவின் அப்பல்லோ விண்வெளித் திட்டத்தின் முதலாவது மனிதப் பறப்புத் திட்டம் / From Wikipedia, the free encyclopedia
அப்பல்லோ 1 (Apollo 1, ஆரம்பப் பெயர்: ஏஎசு-204 (AS-204) என்பது அமெரிக்காவின் நிலாவில் மனிதரைத் தரையிறக்கும்[1] அப்பல்லோ விண்வெளித் திட்டத்தின் முதலாவது மனிதப் பறப்புத் திட்டமாகும்.[2] இப்பறப்பு அப்பல்லோ கட்டளை, மற்றும் சேவைத் தொகுதியின் முதலாவது பூமியின் தாழ் வட்டப்பாதையில் செலுத்தும் சோதனைத் திட்டமாக 1967, பெப்ரவரி 21 இல் விண்ணுக்கு ஏவப்படவிருந்தது.[3] ஆனாலும், இத்திட்டம் கைகூடவில்லை. 1967 சனவரி 27 இல் ஏவல் ஒத்திகை சோதனை கேப் கென்னடி வான்படைத் தளத்தில் இடம்பெற்ற போது, விண்வெளி வீரர்கள் இருந்த விண்கூடத்தில் தீப் பற்றியதால், அதில் இருந்த கசு கிரிசம், எட்வேர்ட் வைட், ராஜர் சாஃபி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் இறந்தார்கள். இந்தத் தீ விபத்தை நினைவு கூரும் முகமாக நாசா நிறுவனம் இதற்கு அப்பல்லோ 1 எனப் பெயர் சூட்டியது.
கிரிசம், உவைட், சாபி | |||||
திட்ட வகை | குழு விண்கல சரிபார்ப்பு சோதனை | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | நாசா | ||||
திட்டக் காலம் | 14 நாட்கள் வரை (திட்டம்) | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கலம் | சிஎசுஎம்-012 CSM-012 | ||||
விண்கல வகை | அப்பல்லோ கட்டளை, சேவைத் தொகுதி, தொகுதி I | ||||
தயாரிப்பு | நோர்த் அமெரிக்கன் ஏவியேசன் | ||||
ஏவல் திணிவு | 20,000 கிகி (45,000 இறா) | ||||
உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 3 | ||||
உறுப்பினர்கள் |
| ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | பெப்ரவரி 21, 1967 (திட்டமிடப்பட்டது) | ||||
ஏவுகலன் | சட்டர்ன் ஐபி AS-204 | ||||
ஏவலிடம் | கேப் கென்னடி எல்சி-34 | ||||
திட்ட முடிவு | |||||
அழிப்பு | சனவரி 27, 1967 23:31:19 UTC | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | புவிமையம் | ||||
சுற்றுவெளி | பூமியின் தாழ் வட்டப்பாதை | ||||
அண்மைgee | 220 கிமீ (திட்டம்) | ||||
கவர்ச்சிgee | 300 கிமீ (திட்டம்) | ||||
சாய்வு | 31 பாகை (திட்டம்) | ||||
சுற்றுக்காலம் | 89.7 நிமி (திட்டம்) | ||||
|
நாசா இவ்விபத்து பற்றி ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வையிட அமெரிக்க சட்டமன்றத்தின் இரு அவைகளும் தமது குழுக்களை நியமித்திருந்தன. மின்சார ஒழுக்கே நெருப்பு பரவியதன் மூலமாக தீர்மானிக்கப்பட்டது. எரியக்கூடிய நைலான் பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. ஆட்கள் தங்கியிருந்த அறை அதிக அழுத்தத்தையும், தூய ஆக்சிசனைக் கொண்டிருந்தமையும் தீ பரவக் காரணமாக அறியப்பட்டது. அறையின் கதவும் உள் அழுத்தம் காரணமாகத் திறக்கப்பட முடியவில்லை. ராக்கெட்டில் எரிபொருட்கள் இல்லாததால், சோதனை அபாயகரமானதாகக் கருதப்படவில்லை, அதற்கான அவசரகாலத் தயாரிப்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை.
சட்டமன்ற விசாரணையின் போது, முதன்மை அப்பல்லோ ஒப்பந்தக்காரர் வட அமெரிக்கன் ஏவியேசனுடனான சிக்கல்களை மேற்கோள் காட்டிய நாசாவின் உள் ஆவணத்தை மேலவை உறுப்பினர் வால்ட்டர் மொண்டேல் பகிரங்கமாக வெளியிட்டார், இது "பிலிப்சு அறிக்கை" என்று பிரபலமாக அறியப்பட்டது. இந்த ஆவணத்தைப் பற்றி அறியாமல் இருந்த நாசாவின் நிர்வாகி ஜேம்ஸ் ஈ. வெப் இதன் மூலம் சங்கடத்துக்குள்ளானார். நாசாவின் திறந்த தன்மை இல்லாமை குறித்து அமெரிக்க சட்டமன்றம் அதிருப்தி கொண்டிருந்த போதிலும், சட்டமன்றத்தின் இரு அவைகளும் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் விபத்துக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்று தீர்ப்பளித்தன.
இந்த விபத்தை அடுத்து, மனிதப் பறப்புப் பயணங்கள் 20 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. இக்காலப் பகுதியில், கட்டளைத் தொகுதியின் அபாயகரமான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. இருப்பினும், நிலவுக் கலம் (எல்எம்), சாடர்ன் 5 நிலவு ஏவுகலம் ஆகியன வளர்த்தெடுக்கப்பட்டு தோதிக்கப்பட்டன. அப்பல்லோ 1 இன் ஏவுபொறி சாடர்ன் ஐபி முதலாவது நிலவுக்கலத்தின் சோதனை பறப்பான "அப்பல்லோ 5" இற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்பல்லோ திட்டத்தின் முதலாவது வெற்றிகரமான மனிதப்பறப்பு அப்பல்லோ 7 1968 அக்டோபரில் செலுத்தப்பட்டது.