அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை
மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை / From Wikipedia, the free encyclopedia
அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Anwar Pertama; ஆங்கிலம்: Anwar Ibrahim First Cabinet; சீனம்: 安瓦尔·易卜拉欣第一内阁); என்பது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை ஆகும்.
அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை Anwar Ibrahim First Cabinet | |
---|---|
23-ஆவது அமைச்சரவை - மலேசியா | |
2022– | |
உருவான நாள் | 3 திசம்பர் 2022 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | அன்வார் இப்ராகிம் |
துணை அரசுத் தலைவர் | அகமத் சாகித் அமிடி பாட்சிலா யூசோப் |
நாட்டுத் தலைவர் | சுல்தான் அப்துல்லா |
தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை | 28 அமைச்சர்கள் 27 துணை அமைச்சர்கள் |
உறுப்புமை கட்சி |
மலேசிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி மலேசிய தேசிய கட்சி சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி |
சட்ட மன்றத்தில் நிலை | பாக்காத்தான் ஒற்றுமை அரசாங்கம் 148 / 222 |
எதிர் கட்சி | |
எதிர்க்கட்சித் தலைவர் | முகிதீன் யாசின் |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது மலேசிய மக்களவை, 2022–2026 (2022-) |
முந்தைய | இசுமாயில் சப்ரி அமைச்சரவை |
மலேசியாவின் 10-ஆவது பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த 23-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (Unity Government) அமைக்குமாறு மலேசியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள்; அன்வார் இப்ராகிமைக் கேட்டுக் கொண்டார்.[1]
2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அமைச்சர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.[2]