அசூர்பனிபால்
From Wikipedia, the free encyclopedia
அசூர்பனிபால் (Ashurbanipal) பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் புது அசிரியப் பேரரசை கிமு 668 முதல் கிமு 627 முடிய 41 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் ஆவார். இவரே அசூர் நகரத்தை நிறுவியவர் ஆவார்.[1]
அசூர்பனிபால் Aššur-bāni-apli ܐܫܘܪ ܒܢܐ ܐܦܠܐ | |
---|---|
சிங்கத்தை வேட்டையாடும், புது அசிரியப் பேரரசர் ஆசூர்பனிபால், பிரித்தானிய அருங்காட்சியகம் | |
ஆட்சி | கிமு 668 – 627 |
முன்னிருந்தவர் | எசர்ஹத்தோன் |
பின்வந்தவர் | அசூர்-எதில்-இலானி |
துணைவர் | லிப்பாலி-சர்ராத் |
வாரிசு(கள்) | அசூர்-எதில்-இலானி சின்ஷரிஷ்குன் அசூர் உபாலித் (?) |
அரச குலம் | சர்கோனிய வம்சம் |
தந்தை | எசர்ஹத்தோன் |
தாய் | அசூர்-ஹம்மத் |
பிறப்பு | நினிவே |
இறப்பு | கிமு 627 நினிவே |
புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால், பேரரசின் தலைநகரான நினிவே நகர அரண்மனையில், அசிரிய அரசர்களின் தகவல்களை ஆப்பெழுத்து களிமண் பலகைகள் மற்றும் சிற்பத்தூண்களில் செதுக்கி வைத்தார்.[2] அசூர்பனிபால் காலத்திய தொல்பொருட்களில் புகழ் பெற்றது, அசூர்பனிபாலின் நூலகம், சிங்கத்தை வேட்டையாடும் அசூர்பனிபால் சிற்பம், அசூர்பனிபாலின் சிதைந்த அரண்மனைகள் ஆகும். இவர் பபிலோனியாவில் தன் பெயரால் அசூர் நகரத்தை நிறுவினார்.
பேரரசர் அசூர்பனிபாலை யூதர்களின் வேத நூல் அசெனப்பர் (Asenappar) எனக் கூறுகிறது. (எபிரேயம்: אָסְנַפַּר, தற்கால 'Asnapar திபேரியம் 'Āsenapar - வார்ப்புரு:Bible verse).[3]