மரியாள் (இயேசுவின் தாய்)
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை கிறித்தவர்கள் மரியாவைப்பற்றி கொண்டுள்ள பொது பார்வை பற்றியது. கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கம் குறித்து அறிய, தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்) என்பதைப் பாருங்கள். மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு, உரோமன் கத்தோலிக்க மரியாளியல் என்பதைப் பாருங்கள்.
மரியா அல்லது மரியாள் (அரமேயம்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்), என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.[2] உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.
விரைவான உண்மைகள் மரியாள், பிறப்பு ...
மரியாள் | |
---|---|
குழந்தை இயேசுவுடன் மரியாள் (ஓவியர்: ராபர்ட் ஃபெருசி) | |
பிறப்பு | செப்டம்பர் 8 (பாரம்பரியம்; மரியாவின் பிறப்பு) ஏ. 18 கி.முC[1] |
சொந்த ஊர் | நாசரேத்து, கலிலேயா |
பெற்றோர் | யோவாக்கிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி) அன்னா (தாய்; பாரம்பரியத்தின்படி) |
வாழ்க்கைத் துணை | யோசேப்பு |
பிள்ளைகள் | இயேசு கிறிஸ்து |
மூடு