பொருள்முதல் வாதம்
From Wikipedia, the free encyclopedia
அண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருள்முதல் வாதம் (materialism) எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற கருத்து முதல்வாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர்.
பொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யமுடியவில்லை.