பெனிட்டோ முசோலினி
From Wikipedia, the free encyclopedia
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922–1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
பெனிட்டோ முசோலினி Benito Mussolini | |
---|---|
இத்தாலியின் 40 வது பிரதமர் | |
ஆட்சியாளர்கள் | மூன்றாம் விக்டர் இமானுவேல் (அரசராக) |
முன்னையவர் | லுகி பேக்டா (தலைவராக) |
பின்னவர் | பியுட்ரோ படாஜியோ |
பேர்ரசின் முதல் படைத்தளபதி பதவியில் 30 மார்ச் 1938 முதல் 25 ஜூலை 1943 வரை பின் வந்தவர் பியுட்ரோ படாஜியோ | |
இத்தாலிய சோசலிச குடியரசு டியூஸ் பதவியில் 23 செப்டம்பர், 1943 முதல் 25 ஏப்ரல் 1945 வரை. | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | thumb (1883-07-29)சூலை 29, 1883 பிரிடேப்பியோ, போர்லி, இத்தாலி |
இறப்பு | ஏப்ரல் 28, 1945(1945-04-28) (அகவை 61) கோமோ ஆறு, இத்தாலி |
இளைப்பாறுமிடம் | thumb 250px |
தேசியம் | இத்தாலியர் |
அரசியல் கட்சி | பாசிசக் குடியரசுக் கட்சி (1943–1945), தேசிய பாசிசக் கட்சி (1921–1943) இத்தாலிய பொதுவுடமைக் கட்சி (1901–1914) |
துணைவர்கள் | ரெய்ச்சல் முசோலினி |
பெற்றோர் |
|
வேலை | பத்திரிகை எழுத்தாளர், அரசியல்வாதி, சர்வாதிகாரி |