பாலம்பூர்
From Wikipedia, the free encyclopedia
பாலம்பூர் என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது தேவதாரு மரங்களாலும், தவ்லதர் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் அதன் பெயரை உள்ளூர் வார்த்தையான பாலம் என்பதிலிருந்து பெற்றது. பாலபூர் என்றால் நிறைய நீர் பொருள்படும். பாலம்பூரில் மலைகளிலிருந்து சமவெளிகளுக்கு ஏராளமான நீரோடைகள் பாய்கின்றன. பசுமை மற்றும் நீர்வளம் என்பன பாலம்பூருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.