பனித்தூவி
From Wikipedia, the free encyclopedia
பனித்தூவல் (Snow/Snowflake) அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் காணலாம்..[1]> தகுந்த சூழல்களில் வளிமண்டலத்தில் படிகமுற்று உருவாகியதும் அதன் சுழற்சி முழுவதும் இது பனிப்படிகமாகவே அமைகிறது. இது வலிமண்டலத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் பெரியதாகி, பொழிந்து டரை மேற்பரப்பில் படி ந்து திரள்கிறது. பின்னர், அங்கேயே உருமாற்றம் அடைகிறது. உருமாற்றத்தின்போது உருகலாம்; நழுவலாம்; பதங்கமாகலாம். வளிமண்டலௌ ஈரமும் தண்ணிய காற்ரையும் பயன்படுத்திப் பனிபுயல்கள் உருவாகி வளரலாம். பனித்தூவல்கள் வளிமண்டலத் தூசி சுற்றி கருவாகி ஈர்ப்புற்ரு மேலும் மேலும் குளிர்ந்து நீர்த்துளியாகலாம்; இது பின் அறுகோணப் படிகங்களாக உறைகிறது. பனித்தூவல்கள் பல வடிவங்களில் அமையலாம். இவற்றில அடிப்படையானவை, தூவல்கள், ஊசிகள், தூண்கள், [[வன்குறுணைகள்|குறுணைகள் போன்றனவாகும். இவ்வாறு திரளும் பனி பாளங்களாகலாகி, நகரலாம். கால அடைவில், திரண்ட பனி கெட்டியாகிடலாம்; பதங்கமாகலாம்; உறைபாறையாக உருமாற்றம் உறலாம். களக் காலநிலை போதுமான அளவு குளிர்வாக அமைந்தால், ஒவ்வோராண்டும் திரளும் பனி, பனியாறாகவும் உருவெடுக்கலாம். அப்படி நேராதபோது பருவந்தோறும் உருகி, சிற்றோடைகளாகவோ ஆறாகவோ ஓடலாம்; நிலத்தடி நீராகத் தேங்கலாம். உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட வெப்பநிலை தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். நிலநடுக் கோடு இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ தனிமலையில் வெண்பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். இம்மலையில் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். இமயமலைத் தொடரில் எப்பொழுதும் வெண்பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் கூடுதல் உயரம் உள்ள மலைகள் பலவுண்டு. நிலவுலகின் வடமுனையிலும் (ஆர்ட்டிக்), தென்முனையிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை (குளிர்ந்த காற்று ஈரப்பதத்தை மேகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை). அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது. பேரளவு பனி சூழ்ந்த வெளிகளாக புவிமுனைப் பகுதிகள் அமைகின்றன; வட அரைக்கோள மேற்பாதியிலும் தென் அரைக்கோள முன்னையிலும் ஈரமும் தண்ணிய வெப்பநிலையும் நிலவும் அண்டார்ட்டிகா தவிர்த்த உலகின் அனைத்து மலைப்பகுதிகளிலும் பனிவெளி பரவியுள்ளது.[2]
பனி போக்குவரத்து போன்ற மக்கள் செயல்பாடுகளைத் தாக்குவதால், சாலைகளையும் சாளரங்களையும் பனிபடராமல் காத்திட வேண்டும்; வேளான்மை க்கான நீர்ப்பாசனம், கால்நடை பேணல், விளையாட்டுகள் பனிச்சறுக்கல், பனி எந்திரப்பயணம் போரிடல் போன்ற செயல்பாடுகள் பனிவழி தாக்குறாவண்ணம் காப்பாற்றவேண்டும். பனி நாம் நினைக்கும் இலக்கை அடையவொண்ணாமல் தடுக்கும்; பொருள்களின் தரத்தைக் குறைக்கும். போட்டியின்போது வீரர்களின் வலைமையைக் குன்றச்செய்யும்; நம் நகர்வுகளைக் குலைக்கும். பனி சூழல் அமைப்புகளைத் தாக்குவதோடு, சிலவேளைகளில் பனியடௌக்கால் நிலைத்திணைகளையும் விலங்குகளையும் குளிரில் இருந்து காப்பதும் உண்டு.[3]