நெல்சன் மண்டேலா
காந்தியவாதி / From Wikipedia, the free encyclopedia
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
நெல்சன் மண்டேலா Nelson Mandela | |
---|---|
2008 இல் மண்டேலா | |
தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் | |
பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 | |
முன்னையவர் | பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் |
பின்னவர் | தாபோ உம்பெக்கி |
அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் | |
பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 | |
முன்னையவர் | அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ |
பின்னவர் | தாபோ உம்பெக்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நெல்சன் ரொலிலாலா மண்டேலா (1918-07-18)18 சூலை 1918 முவெசோ, தென்னாப்பிரிக்கா |
இறப்பு | 5 திசம்பர் 2013(2013-12-05) (அகவை 95) |
அரசியல் கட்சி | ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் |
துணைவர்(கள்) | எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) |
வாழிடம்(s) | ஹூஸ்டன் எஸ்டேட், தென்னாப்பிரிக்கா |
கையெழுத்து | |
இணையத்தளம் | Mandela Foundation |
மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தியதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் படுகிறார்.1937ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு,மாடு,மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா,லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டம்சட்டக்கல்வி படித்தார். தங்கச்] சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்துகொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.