தேவயானி
From Wikipedia, the free encyclopedia
தேவயானி அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான சுக்கிராச்சாரியாரின் மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க சீடனாக வந்த பிரகஸ்பதியின் மகன் கசன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு அந்தணர் திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.
- இதே பெயரைக் கொண்ட நடிகையைப் பற்றி அறிய, தேவயானி (நடிகை) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.