சேரீசு (தொன்மவியல்)
From Wikipedia, the free encyclopedia
பண்டை உரோமச் சமயத்தில், சேரீசு (Ceres - /ˈsɪəriːz/) ஒரு பெண் தெய்வம். இத்தெய்வம், வேளாண்மை, தானியப் பயிர், வளமை, தாய்மை உறவுகள் ஆகியவற்றோடு தொடர்புடையவள். தொடக்கத்தில், உரோமின் "பிளெபியன்" அல்லது "அவென்டைன்" முத்தெய்வங்களுள் முக்கியமானவளாக விளங்கியவள் இவள். இத் தெய்வத்துக்காக ஏப்ரலில் ஏழு நாள் திருவிழா கொண்டாடினர். இத்திருவிழாவில் "லூடி" (Ludi) எனப்படும் விளையாட்டையும் விளையாடுவது வழக்கமாக இருந்தது. மே மாதத்தில் அக்கால உரோமில், அறுவடை நாட்களில் இடம்பெறும் "அம்பவாலியா" (Ambarvalia) என்னும் திருவிழாவின் ஒரு பகுதியாக வயல்களைத் தூய்மையாக்கும் சடங்கு இடம்பெற்றது. இச் சடங்கிலும், உரோமர்களின் திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கான சடங்குகளிலும் சேரீசுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
கிரேக்கத் தொன்மங்களில் "பன்னிரண்டு ஒலிம்பியர்"களுக்கு இணையான உரோமர்களின் "டி கான்சென்ட்டீசு" எனப்படும் தெய்வங்களின் குழுவில் வேளாண்மைக்கான தெய்வம் சேரீசு மட்டும் அல்ல. செரீசுவை கிரேக்கர்களின் டிமிடர் உரிய தொன்மங்கள் செரீசுவின் மீது ஏற்றிக் கூறப்பட்டன.