கவிஞர்
கவிதை எழுதும் நபர் / From Wikipedia, the free encyclopedia
கவிஞர் (Poet) என்பவர் கவிதையை உருவாக்கும் நபர் ஆவார். இவர்கள் புலவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். கவிஞர் தன்னை தானே கவிஞர் என்று வர்ணித்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்களால் இவர் கவிஞரென்று விவரிக்கப்படலாம். ஒரு கவிஞர் வெறுமனே கவிதை எழுத்தாளராக மட்டும் இருக்கலாம் அல்லது பார்வையாளர்களுக்கென்றே அவர் தன் கவிதை கலையை வெளிப்படுத்துபவராகவும் இருக்கலாம். ஒரு கவிஞரின் பணி அடிப்படையில் தகவல்தொடர்புகளில் ஒன்றாக இருக்கும். கவிஞர் தன்னுடைய எண்ணங்களை அல்லது, சிந்தனைகளை இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துவார். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது இடம் அவருடைய மையக் கருத்தாக இருக்கும். கவிஞர் தான் சொல்லப் புகுந்த ஒரு பொருளை கற்பனையோடு அல்லது உருவகத்தோடு ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறார், கவிஞர்கள் பழங்காலத்திலிருந்தே கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் இருந்துள்ளனர். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்டங்களில் இவர்கள் பெரிதும் மாறுபடும் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு நாகரிகம் மற்றும் மொழி வரலாறு முழுவதும் கவிஞர்கள் இலக்கிய வரலாற்றின் போக்கில் அவ்வப்போது மாறியுள்ள பல்வேறு பாணிகளைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதியுள்ளனர். இதன் விளைவாக கவிஞர்களின் வரலாறும் அவர்கள் உருவாக்கிய இலக்கியங்களைப் போலவே வேறுபட்டது.
பணி | |
---|---|
பணி வகை | தொழில் |
செயல்பாட்டுத் துறைகள் | இலக்கியம் |
விளக்கம் | |
திறமைகள் | எழுத்து |
தொடர்புள்ள பணிகள் | புதின எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் |