பொதுவுடைமை அறிக்கை
From Wikipedia, the free encyclopedia
பொதுவுடமை அறிக்கை (The Communist Manifesto, டொய்ச்: Das Manifest der Kommunistischen Partei அல்லது பொதுவாக பொதுவுடமை அறிக்கை) எனப்படுவது 1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆல் இணைந்து எழுதப்பட்ட அறிக்கை ஆகும். இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்-ன் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், பொதுவுடமை சமூகத்தினை உருவாக்கும் பாட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்ககை உலக அரசியல் நடவடிக்கையில் மிக்க செல்வாக்கை செலுத்துகின்றது.
'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.