2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும்
தொங்கா எரிமலை வெடிப்பு / From Wikipedia, the free encyclopedia
2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும் (2022 Hunga Tonga eruption and tsunami) 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்தன. தொங்கா நாட்டின் எரிமலைத் தீவான உங்கா தொங்காவில் ஒரு பெரிய வெடிப்பு 15 சனவரி 2022 அன்று ஏற்பட்டது. இந்த வெடிப்பு தொங்கா, பிஜி மற்றும் அமெரிக்க சமோவாவில் சுனாமிகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிஜி, சமோவா, வனுவாட்டு, நியூசிலாந்து, ஆத்திரேலியா, சப்பான், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சிலி மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[1] நியூசிலாந்து, அமெரிக்கா, சிலி மற்றும் பெருவில் ஆழிப்பேரலைகள் சேதப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.[2] பெருவில் 2 மீட்டர் அலை கடற்கரையைத் தாக்கியதில் இருவர் நீரில் மூழ்கினர். கலிபோர்னியாவில் இரண்டு மீனவர்கள் இலேசான காயமடைந்தனர்.
2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும் 2022 Hunga Tonga eruption and tsunami | |
---|---|
உங்கா தொங்காகாவில் மேல் நோக்கி எழுந்த சாம்பல் புகைப்படலம், 15 சனவரி 2022 | |
எரிமலை | உங்கா தொங்கா |
அமைவிடம் | அமைதிப் பெருங்கடல், தொங்கா 20.550°S 175.385°W / -20.550; -175.385 (Hunga Tonga) |
தாக்கம் |
|