2000 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலை
From Wikipedia, the free encyclopedia
2000 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலைகள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் இமயமலையில் அமைந்த சிவத்தலமான அமர்நாத்தை தர்சனம் செய்யச் சென்றவர்களில் 89 இந்து சமய யாத்திரீகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆகஸ்டு மாதம், 2000-ஆம் ஆண்டு 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில், அனந்தநாக் மாவட்டம் மற்றும் தோடா மாவட்டங்களின் வழியாக அமர்நாத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்து பக்தர்களை குறிவைத்து 5 இடங்களில், காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகளாலும், கையெறிகுண்டு வீச்சுகளாலும் 89 பேர் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் 62 பேர் படுகாயமுற்றனர்.[1]
கொல்லப்பட்டவர்களில் 32 பேர் பகல்கம் அடிவார முகாமில் 2 ஆகஸ்டு 2020 அன்று கொல்லப்பட்டனர், 7 பேர் படுகாயமடைந்தனர்.[2][3][4]முன்னதாக பயங்கரவாதிகள் 1 ஆகஸ்டு 2000 அன்று தோடா மாவட்டத்தின் கிராமத்தின் 11 பொதுமக்களை சுட்டுக் கொன்றனர்.
அப்போது இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாச்பாய் உடனடியாக பகல்கம் முகாமிற்கு சென்று அமர்நாத் பக்தர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இந்த படுகொலைகளுக்கு பொறுப்பு ஏற்ற லஷ்கர்-ஏ-தொய்பா எனும் இசுலாமிய பயகரவாத இயக்கத்தை கண்டனம் செய்தார்.[5]