1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1940 Summer Olympics) அலுவல்முறையாக பன்னிரெண்டாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் ( Games of the XII Olympiad) நடைபெறவில்லை.
இந்த ஒலிம்பிக் போட்டி 1940இல் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை சப்பானின் தோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது; ஆனால் 1938இல் இரண்டாம் சீன-சப்பானியப் போர் காரணமாக சப்பானிய ஒருங்கிணைப்பாளர்கள் விலகிக் கொண்டனர்.[1]
எனவே 1938இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இந்த ஒலிம்பிக்கை பின்லாந்தின் எல்சிங்கியில் நடத்த முடிவு செய்தது.[2]
ஆனால் மீண்டும் இரண்டாம் உலகப் போர் காரணமாக இந்தப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[3]