ஹூலியன் தொடருந்து தடம்புரண்டு விபத்து
From Wikipedia, the free encyclopedia
ஹூலியன் தொடருந்து தடம்புரண்டு விபத்து என்பது ஏப்ரல் 2, 2021, 09:28 NST மணிக்கு 09:28 NST (01:28 UTC) தைவான் இரயில்வே நிர்வாகத்தின் டாரோகோ விரைவு தொடருந்து தடம் புரண்டது விபத்திற்குள்ளது. இந்த விபத்தானது ஹெரென் மார்க்கத்தில் உள்ள குயிங்சூயி சுரங்க வடக்கு நுழைவாயில் பகுதியில் சியூலின் நகரத்தில் ஹுலியன் கவுண்டி பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 51 இறந்தனர், மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[4][3][5][6][2]:{{{3}}} விபத்து நடந்த நேரத்தில், இந்த தொடருந்தில் 488 பயணிகள் பயணம் செய்தனர்.[4][7] ஹூலியன் நகரத்தின் வடக்கே சுரங்கப்பாதையில் எட்டு பெட்டிகளுடன் பயணம் செய்த இந்த விரைவு வண்டி கட்டுமான வண்டி ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்கு உள்ளானது. கட்டுமான வண்டியானது சாய்வு பாதையில் சரிந்து விபத்திற்குள்ளானது.[8]
தடம்புரண்ட டாரோகோ விரைவு தொடருந்து சுரங்கவழி நுழைவுப்பகுதியில் வெளியிருந்து தோற்றம் | |
நாள் | 2 ஏப்ரல் 2021 |
---|---|
நேரம் | 09:28 தேசிய சீர் நேரம் (01:28 (UTC) |
அமைவிடம் | குயிங்சூயி சுரங்கத் தடம், சியூலின் ஹீலியன் நாடு ஹெரன் மற்றும் சோங்டீ தொடருந்து நிலையங்களுக்கிடையில்(51.45 km (31.97 mi) சூயாக்சின் தொடருந்து நிலையத்திலிருந்து)[1] |
புவியியல் ஆள்கூற்று | 24.2171°N 121.6883°E / 24.2171; 121.6883 |
வகை | தடம் புரண்டு, மோதல் |
இறப்புகள் | 49[2]:{{{3}}} |
காயமுற்றோர் | 202[3] |
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் (1948க்குப் பிறகு) தைவானில் ஏற்பட்ட மிக மோசமான தொடருந்து விபத்து இதுவாகும். 1948ல் நிகழ்ந்த ஒரு தொடருந்து தீ விபத்தில் 64 பேர் கொல்லப்பட்டனர்.[9] இது தைவான் இரயில்வே நிர்வாகத்தினரால் மிக மோசமான இரயில் விபத்து என்று அழைக்கப்பட்டது.[10]:{{{3}}}