ஸ்தேவான் (புனிதர்)
பண்டைய உரோமானியத் துறவி / From Wikipedia, the free encyclopedia
புனித ஸ்தேவான் (Saint Stephen) (கிரேக்கம்: Στέφανος, ஸ்தேபனோஸ்), கிறித்தவத்தின் முதல் இரத்தசாட்சி ஆவார்.
விரைவான உண்மைகள் புனித ஸ்தேவான், திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி ...
புனித ஸ்தேவான் | |
---|---|
மாட்சிமையில் புனித ஸ்தேவான் ஓவியர்: கியாகோமோ கேவ்டன் | |
திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி | |
இறப்பு | சுமார் கிபி 34 எருசலேம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவ பிறிவுகளிலும் |
திருவிழா | 26 டிசம்பர் (மேற்கத்திய முறை) 27 டிசம்பர் (கிழக்கத்திய முறை) |
சித்தரிக்கப்படும் வகை | கற்கள், திருத்தொண்டர் உடை, தூப கலசம், நற்செய்தி நூல் |
பாதுகாவல் | சவப்பெட்டி செய்வோர், திருத்தொண்டர்கள், பீட சிறுவர், தலைவலி; குதிரைகள்; கொத்தனார்கள்; செர்பியா[1] |
மூடு
கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார்.