வைகறை
From Wikipedia, the free encyclopedia
வைகறை (Dawn) அல்லது விடியற் காலை அல்லது அதிகாலை சூரியோதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும்.[1][2] இது சூரியன் காலையில் கிழக்குத் திசையில் உதிப்பதற்கும், அதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் உள்ள நேரத்திற்கும் இடைப்பட்ட காலப்பொழுதாகும். அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் (அதி)காலை மூன்று மணி முதல் காலை ஆறு மணி வரையிலான பொழுதே அதிகாலை எனப்படுகிறது. நம் காதுகளுக்கு இனிமை தரும் கூவலைத் தந்திடும் சேவலின் குரல் கேட்டிடும் பொழுதாகும்.[3]இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படும்.[2] இது சூரிய ஒளியின் மெல்லிய ஒளியாக, சந்தியொளியின் ஆரம்பமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வேளையில் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் வான்வெளியில் அதிக அளவில் காணப்படுகிற ஓசோன் வாயு அதிக அளவில் ஆக்சிசனை வெளியிடுவதால், வீட்டு வாசலில் கோலமிடும் மகளிர் அக்காற்றை சுவாசிப்பதால் நாள் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து புத்துணர்வுடன் திகழ்கின்றனர்.[4] மார்கழி மாத அதிகாலையில் வைணவ அன்பர்கள் நாமசங்கீர்த்தனம் செய்தும், சைவ அன்பர்கள் வீதிகளில் பசனை பாடியும் அதிக அளவில் ஆக்சிசனை சுவாசிக்கின்றனர்.[5] அந்நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.[6] ஆரோக்கியம் மட்டுமன்றி புத்தி கூர்மை உடையவராகவும், திறமையுள்ளவராகவும் திகழ்பவர்கள் அதிகாலை எழுபவர்கள்.[7] அதிகாலை தூக்கத்திலிருந்து எழுபவர்கள் கண்பார்வை அதிக வயது வரை நன்றாக இருக்கும்.[8] சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய அதிகரிக்கும் உடலின் அதிகாலை சர்க்கரை அளவை, அதிகாலை, மிதமான உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்.[9]