வின்செஞ்சோ கலிலீ
From Wikipedia, the free encyclopedia
வின்செஞ்சோ கலிலீ (Vincenzo Galilei) (1520 - 2 ஜூலை 1591) ஓர் இத்தாலிய யாழ் வல்லுனரும் பாடலாசிரியரும் இசைக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் புகழ்மிகு அறிவியலாளரான கலிலியோ கலிலீயின் தந்தையார் ஆவார் of the lute virtuoso and composer Michelagnolo Galilei. இவர் பிந்தைய மறுமலர்ச்சிக் கால இசை வாழ்க்கையில் முதன்மையான ஆளுமையாவார். இவர் இசையில் பெரும்புரட்சி செய்தவர். பரோக் இசையூழியை தொடங்கி வைத்தவர்.
- இக்கட்டுரை கலிலியோ கலிலீயின் த்தையாரைப் பற்றியதாகும். கலிலியோவின் மகனைப் பற்றி அறிய, காண்க வின்செஞ்சோ காம்பா.
வின்செஞ்சோ உரப்பு, நாண் இழுப்பு உறவில் நேரிலா சமன்பாட்டை இசை வரலாற்ரிலேயே முதன்முதலாக விவரித்து விளக்கியவர் ஆவார்.[1] இது பித்தகோரிய மரபின் விரிவாக்கம் ஆகும். மேலும் அம்மரபைக் கடந்து முன்னேறியதுமாகும். இவர் தன் மகனைத் தனி நுண்ணிலைக் கணிதமுரையில் இருந்துச் செய்முறைத் தடத்தை நோக்கிச் செல்லவும் அதன் முடிவுகளைக் கணிதவியல் விவரிப்பால் விளக்கவும் வழிப்படுத்தியவராக பல அறிஞர்கள் கருதுகின்றனர். இது குறிப்பாக இயற்பியலிலும் பொதுவாக இயற்கை அறிவியலிலும் ஏற்பட்ட புதிய திருப்பம் ஆகும்.