வாரணாசி இசை
From Wikipedia, the free encyclopedia
வாரணாசி இசை ( Music in Varanasi), பண்டைய புராண புனைவுகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த நகரத்தை நிறுவியதாகக் கூறப்படும் சிவன், இசை மற்றும் நடன வடிவங்களை வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். விஸ்வாமித்திரர் மற்றும் மகாகோபிந்தின் மகனான ரேணு, வாரணாசியில் இசை மரபின் முன்னோடிகளாக இருந்தபோது, அரம்பையர்கள், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் ஆகியோர் இந்த கலை வடிவத்தின் பாரம்பரிய பயிற்சியாளர்களாக இருந்தனர். மேலும் புனித சைதன்யர் மற்றும் வல்லபச்சார்யா போன்ற முன்னோடிகள் இந்த இசை பாரம்பரியத்தை வாரணாசியில் பரப்புவதில் கவனம் செலுத்தினர். [1] வாரணாசியின் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களில் சிடார் இசைக்கலைஞர் ரவிசங்கர், செனாய் இசைஞானி பிஸ்மில்லா கான் மற்றும் பாடகர் கிரிஜா தேவி ஆகியோர் அடங்குவர். தற்போது, கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் கீழ் யுனெஸ்கோ "சிட்டிஸ் ஆஃப் மியூசிக்" இன் உலகளாவிய அலைவரிசையில் வாரணாசி இசை இணைந்துள்ளது. [2] படைப்பு நகர நெட்வொர்க்கின் இசை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசி இந்த பண்டைய நகரத்தின் வளமான இசை பாரம்பரியத்தை தெளிவாக குறிக்கிறது.