வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/15
From Wikipedia, the free encyclopedia
மூணார் (அல்லது மூணாறு) தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்பது இதன் பெயர். இது பேச்சுத் தமிழில் மருவி இப்பொழுது மூணாறு என்று ஆகியுள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் முகில்கள் விளையாடும் மலைமுகடுகளும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சிகளாகும்.