வன்னி நாடு
From Wikipedia, the free encyclopedia
வன்னி நாடு என்பது வன்னியர்கள் என்ற பட்டதோடு பல குறுநில ஆட்சியாளர்கள் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியை 12 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும். இராசரட்டை அரசு சிதைவுற்றபின் பல வன்னி அரசுகள் எழுச்சி பெற்றது. இப்பகுதியை தமிழகத்தில் இருந்து வந்த வேளைக்காரப படைகளுக்கு நிலமானியங்களாக வழங்கப்பட்டு ஆளப்பட்டது. இப்பகுதி யாழ்ப்பாண அரசின் தெற்கு விரிவாகவே இருந்தது. வன்னி நாட்டின் ஆட்சியாளர்கள், யாழ்ப்பாண அரசுக்குக்கட்டுப்பட்டே இருந்தனர். 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கல் யாழ்ப்பாண அரசை வென்றது. இதன் பின் வன்னி நாடு போர்த்துக்கேய இலங்கைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. போர்த்துக்கேய இலங்கை பகுதி டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவர்களது ஆட்சிக்கு எதிராக வன்னி நாடு கடைசி மன்னர் பண்டார வன்னியன், கண்டி இராச்சியத்துடன் இணைந்து பலமாக எதிர்த்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ தலைமை அதிகாரி வான் டெரிபெர்கு பண்டார வன்னியரை தோற்கடித்து கொன்று வன்னி நாட்டை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.[3]. தற்போது இது வட மாகாணம், இலங்கை என வழங்கப்படுகிறது.[4]
வன்னி நாட்டு அரசு வன்னி நாடு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
12 ஆம் நூற்றாண்டு–1803[1] | |||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ் | ||||||||
சமயம் | சைவம் | ||||||||
அரசாங்கம் | தலைமையுரிமை | ||||||||
வரலாறு | |||||||||
• வன்னியர்களின் எழுச்சி | 12 ஆம் நூற்றாண்டு | ||||||||
• வன்னியர் கலகம் | 1782 | ||||||||
• கடைசி வன்னிய ஆட்சியாளர் பண்டார வன்னியன் | 31 ஆம் நாள் அக்டோபர் திங்கள் 1803 [2] | ||||||||
|