வனப்பெழுத்து
From Wikipedia, the free encyclopedia
வனப்பெழுத்து (Calligraphy) என்பது ஒரு வகை காட்சிக் கலை ஆகும்.[1]:17 இது எழுதும் கலை எனக் குறிப்பிடப்படுவது உண்டு. ஒரு தற்கால வரைவிலக்கணம் வனப்பெழுத்து எழுதுதலை, வெளிப்பட்டுத் தன்மையுடனும், இயைபுத் தன்மை கொண்டதாகவும், திறமையாகவும் பரந்த முனை கருவி அல்லது தூரிகை கொண்டு குறிகளுக்கு வடிவம் கொடுத்தல் என வரையறுக்கிறது.[1]:18
தற்காலத்து வனப்பெழுத்துக்கள் எழுத்துக்குரிய பயன்பாட்டுத் தன்மை கொண்ட கையால் எழுதப்பட்ட எழுத்துக்களில் இருந்து, பண்பியல் வெளிப்பாட்டுத்தன்மை கொண்ட கையெழுத்துக் குறிகள் வரை பல விதமாக உள்ளன. இவற்றுட் சிலவற்றில் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கக்கூடும். இன்றும் திருமண அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், எழுத்துரு வடிவமைப்பு, வணிகச் சின்ன வடிவமைப்பு, மதம்சார்ந்த கலைகள், பலவகையான அறிவித்தல்கள், வரைகலை வடிவமைப்பு, கல்வெட்டுக்கள், நினைவுக்குரிய ஆவணங்கள் போன்றவற்றினூடாக வனப்பெழுத்து வழங்கி வருகிறது.[2][3][4][5]
திருமண அழைப்பிதழ்கள் மற்றும் நிகழ்வு அழைப்புகள், எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கலை, கைகளால் எழுதப்பட்ட இலச்சினை வரைகலை, மதம் சார் ஓவியங்கள், பணி சார் வனப்பெழுத்துக் கலை, வெட்டு கல்லில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள், மற்றும் நினைவு ஆவணங்கள் ஆகியவற்றில் வனப்பெழுத்து செழுமைகள் தொடர்கிறது. படம் மற்றும் தொலைக்காட்சி, சான்றுகள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வரைபடங்கள் மற்றும் பிற எழுதப்பட்ட படைப்புகள் ஆகியவற்றிற்கான சான்றிதழ்கள் மற்றும் நகரும் படங்களிலும் இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்படுகிறது.[6][7]
பேனா மற்றும் தூரிகைகள் வனப்பெழுத்தின் முதன்மைக் கருவிகளாகும். வனப்பெழுத்துப் பேனா முள்ளானது தட்டையாகவும், வளைவாக அல்லது கூர்மையாகவும் இருக்கக்கூடும்.[8][9][10] அழகுபடுத்துதல் நோக்கத்திற்காக பல் முனை பேனா உலோக தூரிகைகள் பயன்படுத்தப்படக் கூடும். எவ்வாறயினும் பட்டை மற்றும் பந்து முனை பேனா வகைகளும் இவ்வெழுத்து முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கோணக் கோடுகளை இப்பேனாக்களால் உருவாக்கமுடிவதில்லை. கோதிக் என்ற கூர்மாட வகையிலான வனப்பெழுத்துப் பாணி எழுத்துக்களுக்கு கட்டை முனை பேனா பயன்படுகிறது.
வனப்பெழுத்து எழுதும் மையானது பொதுவாக நீர் அடிப்படையிலானது மேலும் அச்சிடுவதற்குப் பயன்படும் எண்ணெய் அடிப்படையிலான மைகளை விட குறைவான பிசுபிசுப்புத் தன்மையுடன் கானப்படுகின்றன. ,[11] உயர் தர தாள்கள் சரியான மை உரிஞசு பதத்தைக் கொண்டுள்ளதால் எழுதும் போது தெளிவான கோடுகள் உருவாக ஏதுவாக உள்ளன. என்றாலும் உயர் ரக தாள்களில் எழுதப்படும் எழுத்துக்களில் ஏற்படும் பிழகைளை சரிசெய்ய சிறு கத்தி வடிவ கருவி பயன்படுகிறது. கோடுகள் அதை கடக்க அனுமதிக்க ஒரு ஒளி பெட்டி தேவையில்லை. வழக்கமாக, ஒளி பெட்டிகள் மற்றும் வார்ப்புருக்கள் ஆகியவை நேரான கோடுகளை வரையவும் பென்சில் குறிப்புகள் இல்லாமல் வேலை செய்யவும் பயன்படுகிறது. ஒரு ஒளி பெட்டி அல்லது கோடிட்ட தாள்களானது பெரும்பாலும் ஒவ்வொரு கால் அல்லது அரை அங்குலத்திற்கோ இடப்பட்டு வரையப்படகிறது. இருப்பினும் அங்குல இடைவெளிகள் எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன.[12]
பொதுவான வனப்பெழுத்து பேனா மற்றும் தூரிகைகளாவன:
- இறகு அல்லது குயில் பேனா
- தோய் பேனா
- மை தூரிகை
- குலாம்
- நீரூற்றுப் பேனா (அல்லது) தூவல்