வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)
From Wikipedia, the free encyclopedia
வடமேற்கு இந்தியப் போர் (1785–1795), சிறிய ஆமைகளின் போர் என்றும் மேலும் பல பெயர்களாளும் அறியப்படுகிறது. இப்போரானது ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொல் குடிகளின் கூட்டமைப்புக்கும் இடையே நடந்தது. வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்த தொல் குடிகளின் கூட்டமைப்பிற்குப் பிரித்தானியா ஆதரவு கொடுத்தது. நூறாண்டுகளாக அமெரிக்காவிற்கும் அமெரிக்கத் தொல் பழங்குடி இனத்தவருக்கும் இடையே இப்பகுதியின் கட்டுப்பாடு யாரிடம் இருப்பது என்று தகராறு இருந்து வந்தது, பின்னாளில் பிரான்சு, பிரித்தானியா மற்றும் அவற்றின் குடியேற்றப் பகுதிகள் இத்தகராறில் அமெரிக்கத் தொல் குடிகளுக்கு ஆதரவாக இறங்கின.
வடமேற்கு இந்தியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்க இந்தியப் போர்கள் பகுதி | |||||||
கிரீன்வில் உடன்பாட்டு உரையாடல்களின் இந்த ஓவியத்தை அந்தோணி வேய்னின் அலுவலர்கள் எவரேனும் வரைந்திருக்கலாம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | மேற்கத்திய கூட்டணி பெரிய பிரித்தானியா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சியார்ச் வாசிங்டன் யோசியா ஆர்மர் ஆர்தர் செயின்ட் கிளையர் அந்தோணி வேய்ன் | அலெக்சாண்டர் மக்கில்லோப் புளூ ஜாக்கெட் லிட்டில் டர்ட்டில் பக்கோன்ககெலாசு எகுஷாவா |
||||||
பலம் | |||||||
4,000 | 2,000 | ||||||
இழப்புகள் | |||||||
1,221 கொல்லப்பட்டனர் 458 காயமடைந்தனர் | 1,000+ கொல்லப்பட்டனர் |
பாரிசு உடன்படிக்கையின் (1783) படி அமெரிக்க புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. அவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியா எண்ணற்ற தொல் குடிகள் வசித்து வந்த வடமேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கையளித்தது. உடன்படிக்கையின் படி கட்டுப்பாட்டை கையளித்திருந்தாலும் பிரித்தானியா கோட்டைகளை அப்பகுதியில் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தொல் குடிகளுக்கு ஆதரவான பல கொள்கை முடிவுகளையும் எடுத்தது. தொல்குடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையேயான சிக்கலை தீர்ப்பதற்காகவும் அமெரிக்காவின் முழுஉரிமையை அப்பகுதியில் நிலைநாட்டவும் அமெரிக்க இராணுவத்தை அதிபர் சியார்ச் வாசிங்டன் அப்பகுதிக்கு அனுப்பினார். அமெரிக்க இராணுவம் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தது மேலும் 2வது வரிசை துணை இராணுவப் படையினரும் அதே அளவில் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தனர். இதனால் அமெரிக்க இராணுவத்தினர் பெரிய தோல்விகளை சந்தித்தனர். ஆர்மர் போர்முனை (1790), புனித கிளேர் தோல்வி (1791) ஆகியவவை அவற்றில் முதன்மையானவை ஆகும். இப்போர்களில் அமெரிக்க தொல் குடிகள் பாரிய வெற்றிகளை பெற்றனர். அமெரிக்க தரப்பில் சற்றேறக்குறைய 1000 வீரர்கள் உயிரிழந்தனர். எதிரிகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் இழப்புகளை சந்தித்தனர்.
புனித கிளேர் தோல்விக்கும் பின் வாசிங்டன் புரட்சிப் போர் நாயக வீரர் செனரல் அந்தோனி வய்னே என்பவரை சண்டையிடம் படையினரை ஒழுங்குபடுத்தி பயிற்சியளிக்கும் படி ஆணையிட்டார். வய்னே புதிய ஐக்கிய அமெரிக்கா வீரர்களின் படையணிக்கு 1793ன் பிற்பகுதியில் தலைமை ஏற்றுக் கொண்டார். 1794ல் வீழும் வெட்டுபட்ட மரம் (Battle of Fallen Timbers) என்ற போரில் இவர் வீரர்கள் தொல் குடிகளுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றனர். தோற்கடிக்கப்பட்ட தொல்குடிகள் பெரும் நிலப்பரப்பை அமெரிக்கர்களிடம் 1795ல் ஏற்பட்ட கிரீன்வில் உடன்படிக்கையின் படி கையளித்தனர். தற்கால பெரும்பகுதி ஒகையோ அதில் அடக்கம்.