லண்டன் வன்முறைகள் 2011
From Wikipedia, the free encyclopedia
லண்டன் வன்முறைகள் (2011 London riots) பிரித்தானியாவில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்களில் 2011 ஆகத்து 6 முதல் 10 வரை இடம்பெற்றன. பிரித்தானியாவின் பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், லண்டன் மேயர் என அரசாங்கத்தின் முக்கியத்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிலையில் லண்டனில் வரலாறு காணாத இக்கலகம் இடம்பெற்றது. கறுப்பின மக்கள் செறிவாக வாழ்கின்ற டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டன் உட்படப் பல நகரங்களுக்கும் பரவியது.
விரைவான உண்மைகள் தேதி, அமைவிடம் ...
2011 லண்டன் வன்முறைகள் | |
---|---|
டொட்டன்ஹாம் நகரில் எரியும் கட்டடங்களைத் தீயணைப்புப் படையினர் அணைக்கின்றனர் | |
தேதி | ஆகத்து 6, 2011 (2011-08-06) – இன்று வரை |
அமைவிடம் | லண்டன், மான்செஸ்டர், மேர்சிசைட், மேற்கு மிட்லண்ட்ஸ், மேற்கு யோர்க்சயர், பிறிஸ்டல், மற்றும் பல. |
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |
5 பொதுமக்கள் இறப்பு 16+ பொதுமக்கள் காயம் 186 காவல்துறையினர் காயம்[1][2][3][4] 1,100+ பேர் கைது |
மூடு