ரோடாசு கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ரோடாசு கோட்டை (Rohtas Fort, உருது: قلعہ روہتاس கிலா ரோடாசு) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஜீலம் நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காவற் கோட்டையாகும். 16ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய அரசர் சேர் சா சூரியால் வடக்கு பஞ்சாப் பகுதியில் பழங்குடியினரின் புரட்சியை ஒடுக்க இக்கோட்டையை கட்டினார். இந்தக் கோட்டையின் சுற்றளவு ஏறத்தாழ 4 கிமீ ஆகும். முகலாயப் பேரரசர் நசிருதீன் உமாயூனை வீழ்த்திய சூர் பரம்பரையை எதிர்த்து போடோகர் பழங்குடிகள் போராடி வந்தனர்; இவர்களை ஒடுக்கவே இந்தக் கோட்டை கட்டப்பட்டது.
ரோடாசு கோட்டை | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 586 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1997 (21வது தொடர்) |
இந்தக் கோட்டையை கட்ட எட்டு ஆண்டுகள் ஆயிற்று; 1555இல் முகலாய பேரரசர் நசிருதீன் உமாயூன் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.[1]ஈரானின் துருக்கிய அரசர் நாதிர் ஷா, ஆப்கானிய அரசர் அகமது ஷா துரானி மற்றும் மராத்தா படைகளும் பஞ்சாப் பகுதியில் போரிட்டபோது இங்கு முகாமிட்டுள்ளனர். 1825இல் இக்கோட்டையை கைப்பற்றிய சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கும் நிர்வாகத்திற்காக இக்கோட்டையை அவ்வப்போது பயன்படுத்தி உள்ளார்.[2][3]