ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்
From Wikipedia, the free encyclopedia
ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்த் தொடர் (Defence of the Reich) என்பது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தில் நிகழ்ந்த ஒரு வான்படைப் போர். நாசி ஜெர்மனியின் (மூன்றாம் ரைக்) வான்படை லுஃப்ட்வாஃபே ஜெர்மனி மற்றும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வான்பகுதிகளில் நேச நாட்டு வான்படைகளுடன் மோதியது. ஜெர்மனியின் படைத்துறை மற்றும் குடிசார் தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்து அதன் மூலம் அந்நாட்டு போர்திறனை முடக்க நேச நாடுகள் முயன்றன. 1939 முதல் 1945 வரை ஆறு ஆண்டுகள் இடையறாது இரவும் பகலும் இரு தரப்பு வான்படைகளும் மோதிக் கொண்ட இப்போர்த் தொடரில் இறுதியில் லுஃப்ட்வாஃபே தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||
வான்போர் நிகழ்ந்த இடங்கள்[1] |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம்
| ஜெர்மனி உருமேனியா அங்கேரி சுலொவாக்கியா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்த்தர் டெட்டர் சார்லஸ் போர்ட்டல் டிராஃபோர்ட் லீக்-மல்லொரி ஆர்த்தர் ஹாரிஸ் கார்ல் ஸ்பாட்ஸ் ஜேம்ஸ் டூலிட்டில் ஐரா ஈக்கர் லாயிட் சாமுவேல் பிரட்னர் | ஹெர்மன் கோரிங் ஹான்ஸ் யெஷோனெக் ஹான்ஸ்-யூர்கன் ஸ்டம்ஃப் யோசப் காம்ஹியூபர் ஹியூகோ ஸ்பெர்லே |
||||||
இழப்புகள் | |||||||
22,000 பிரிட்டானிய வானூர்திகள்[3] 79,281 பிரிட்டானிய வான்படையினர்[3] 18,000 அமெரிக்க வானூர்திகள்[3] 79,265 அமெரிக்க வான்படையினர்[3] | >= 15,430 வானூர்திகள் (வான்சண்டையில்)[4] ~. 18,000 வானூர்திகள் (தரையில்)[5] 97 நீர்மூழ்கிகள்[6] >= 23,000 வாகனங்கள்[7] >= 700-800 டாங்குகள்[8] 5,00,000 பொது மக்கள்[3] >= 450 ரயில் எஞ்சின்கள் (1943ல் மட்டும்)[9] >=4,500 பயணிகள் ரயில் பெட்டிகள் (1943ல் மட்டும்)[9] >= 6,500 சரக்கு ரயில் பெட்டிகள் (1943ல் மட்டும்)[9] |
இப்போர்த் தொடரின் தொடக்கத்தில் லுஃப்ட்வாஃபேவின் சண்டை வானூர்திப் பிரிவான யாக்ட்வாஃபே பிரிட்டானிய குண்டுவீச்சுத் கட்டுப்பாட்டகத்தின் (RAF Bomber Command) குடுவீசி விமானங்களுடன் ஐரோப்பிய வான்பகுதியில் மோதியது. 1942ல் பிரிட்டானியர்களுக்குத் துணையாக அமெரிக்க வான்படையும் இப்போர் தொடரில் பங்கு கொண்டது. ஆரம்பத்தில் இம்மோதல்களில் லுஃப்ட்வாஃபேவிற்கே வெற்றி கிட்டியது. அதன சண்டை வானூர்திகளை சமாளிக்க முடியாமல் திணறிய பிரிட்டானிய வான்படை, பகல் நேர வெளிச்சத்தில் குண்டு வீச்சுத் தாக்குதல்களைத் தவிர்த்து இரவு நேரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அமெரிக்க வான்படை போரில் ஈடுபடத் தொடங்கிய பின்னர் அதன் விமானங்கள் பகல் நேரத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கின. ஆனால் 1942-43ல் அமெரிக்கர்களின் பகல் நேர வான் தாக்குதல் முயற்சி ஜெர்மானிய சண்டை வானூர்திகளால் தோற்கடிக்கபப்ட்டது.
1944ல் நேச நாடுகளின் அதிகமான தொழில் உற்பத்தி திறன், புதிய ரக சண்டை வானூர்திகளை அவர்கள் உருவாக்கியமை, எண்ணிக்கை பலம் ஆகியவற்றால் மெல்ல மெல்ல இதுவரை லுஃப்ட்வாஃபே பெற்றிருந்த வான் ஆதிக்க நிலையைக் குறைத்தன. தரையில் மேற்கு கிழக்கு என இரு திசைகளிலும் இருமுனைப் போர் புரிந்து கொண்டிருந்த ஜெர்மனியால் மேற்கத்திய நேச நாடுகளின் தொழில் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சேதமடையும் வானூர்திகளையும், இறக்கும் விமானிகளையும் புதிய விமானங்களையும் விமானிகளையும் கொண்டு ஈடு செய்வதில் ஜெர்மானியர்கள் நேச நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கினர். மேலும் தரைப்போரினால் ஜெர்மானிய தொழில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லுஃப்ட்வாஃபேவுக்கு தளவாட மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆறாண்டுகளாக நடந்த அரைப்பழிவுப் போரில் (war of attrition) நேச நாட்டு தொழில் வன்மையிடம் ஜெர்மானிய வான்படை தோற்றது.
1944 குளிர் காலத்தில், இரவு (பிரிட்டானிய குண்டுவீசிகள்) பகலாக (அமெரிக்க குண்டுவீசிகள்) ஜெர்மானியத் தொழில் மையங்களையும் நகரங்களையும் தாக்கியதால், அந்நாட்டு உற்பத்தித் திறனும் பொருளாதாரமும் அழிந்தன இதனால் லுஃப்ட்வாஃபே இயங்கவே இயலவில்லை. ஜெர்மானிய வான்பகுதியில் வான் ஆளுமை பெற்ற நேச நாட்டு விமானங்கள் எதிர்ப்பார் யாருமின்றி தங்கு தடையில்லாமல் ஜெர்மனி மீது குண்டு வீசத் தொடங்கின. 1945ல் போர் முடியும் வரை இந்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன.